பாரிய இயற்கை சீற்றம் வட- கிழக்கில் ஏற்ப்படபோகிறது

சனி, 10 நவம்பர், 2018

எதிர்பார்த்தது போன்று சூறாவளி ஜாஜா சென்னை நகரை நோக்கி நகரவர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது .
அடுத்த 24-36 மணி நேரத்தினுல் அந்தமான் தீவுகளிற்கு மேற்காக சூறாவளி உருவாகும் வாய்ப்பு உள்ளது அது 13 ஆம் திகதி ஆகும் போது மத்திய வங்காள விரிகுடாவில் அல்லது சற்று கீழாக
 category 2 சூறாவளியாக மாறும்.தற்போதுள்ள சூழலியல் நிபந்தனைகள் மாறாத விடத்து நவம்பர் 16 ஆம் திகதி category 3 சூறாவளியாக மாறி 180Km/h - 200km/h வேகத்தில் சென்னை நகரைத் தாக்கும். இந்த சூறாவளியின் கண் (Eye) இந்தியாவில் காணப்பட்டாலும் அதன் கண் சுவர் (Eye wall) ,யாழ்ப்பாண நகர் வரை காணப்படலாம்.
இதன் மழை வலயம் ( Rain band) இலங்கையின் மேற்கு வரை 
காணப்படலாம்.
வடகிழக்கு மாகாணங்களில் பயங்கர (Extremly heavy rain)பொழியும் .பயங்கரமான வெள்ள நிலமைகள் கூட ஏற்படலாம் .அத்துடன் யாழ்,கிளிநொச்சி, வட திருகோணமலை பகுதிகளில்
 கடல் அலைகள் 10-12 அடி வரை உயரலாம் ,யாழ் குடா நாட்டின் சில பகுதிகளில் கடல் நீர் நிலப் பகுதியில் உட்செல்ல வாய்ப்பு உள்ளது .
மேல் நிலமைகளை கருத்திற் கொண்டு வட- கிழக்கு மக்கள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
01வானிலை அவதான நிலைய எச்சரிக்கை வந்தவுடன் முழுத் தீவுப் பகுதி மக்களும் வெளியேர (Evacuation) தயாராக
 இருக்க வேண்டும்.
02.யாழ் குடாநாட்டில் கடலில் இருந்து 300m தூரத்தில் வாழும் மக்களும் வெளியேர தயாராக இருக்க வேண்டும்.
03.கிழக்கு ,வட மத்திய ,வட மேல் மாகாண மக்கள் பாரிய வெள்ள அனர்த்த்தை எதிர் கொள்ள தயாராக வேண்டும்.
04.அரச நிருவாக அலகுகள் பூரண ஆயத்துடன் இருக்க வேண்டும்.
05. சகல மீனவர்களும் உடன் கரைக்கு
 திரும்ப வேண்டும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக