கந்தர்மடத்தில் ரயிலில் மோதி சுக்கு நூறாகிய கார்

செவ்வாய், 20 நவம்பர், 2018

யாழ்- காங்கேசன்துறையிலிருந்து கொழும்புநோக்கிப் பயணித்த ரயிலில் காரொன்று மோதுண்டதனால் ஒருவர் 
படுகாயமடைந்துள்ளார்.
கந்தர்மடம் இந்துமகளிர் வீதியில் பாதுகாப்பற்ற ரயில்கடவையில் இன்று நண்பகல் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இதன்போது படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற ரயில்கடவையை கடக்கமுற்பட்டபோதே எதிரேவந்த ரயில், காரைமோதி கந்தர்மடம் அரசடிவீதிவரை இழுத்துச்சென்றுள்ளது.
இந்தநிலையில் குறித்தவிபத்தில் காயமடைந்த வர்த்தகர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக