சூரியன் உச்சத்திற்கு வருவதால் யாழில் ஏற்படவிருக்கும் மாற்றம்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

 வடக்கு நோக்கிய சூரியனின்  தொடர்பான இயக்கம் காரணமாக ஏப்ரல் 05 முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது.
இதன்படி இன்று நண்பகல் 12.10 அளவில் வட்டுக்கோட்டை, சுன்னாகம் மற்றும் அந்தணன்திடல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது பிற்பகல்வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை 
அறிவுறுத்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக