நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில்

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

 

நாட்டில் மோசமான வானிலை காரணமாக அவசரநிலை ஏற்பட்டால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் தொடர்புடைய படையினரை நிலைநிறுத்த விமானப்படை
 நடவடிக்கை எடுத்துள்ளது. 
 இதன்படி, வானிலிருந்து ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக விமானப்படையின் கண்காணிப்பு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அனர்த்தம் ஏற்பட்டால் மக்களுக்கு
 நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மூன்று ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 
 ரத்மலானை விமானப்படை தளத்தில் 'பெல்-412' ரக ஹெலிகொப்டர் ஒன்றும், ஹிகுராக்கொட விமானப்படை தளம் மற்றும் பலாலி விமானப்படை தளம் ஆகியவற்றில் இரண்டு 'பெல்-212' ரக ஹெலிகொப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 
 மீட்புப் பணிகளுக்காக சிறப்புப் பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் சிறப்புப் படை வீரர்களும் அந்த முகாம்களில் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக