நாட்டில் மின் கட்டண திருத்த கருத்துக்களை கூற மக்களுக்கு அரிய வாய்ப்பு

செவ்வாய், 18 ஜூன், 2024

நாட்டில்2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30 க்கு இணங்க, முன்மொழியப்பட்ட இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தை (பொது 
ஆலோசனை) பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
முடிவு செய்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தப் பிரேரணையை இலங்கை மின்சார சபை தற்போது மீளாய்வு செய்து வருகின்றதுடன் அதற்கான
 ஆலோசனைப் பத்திரத்தை www.pucsl.gov.lk என்ற 
இணையத்தளத்தில் அணுக முடியும்.
உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பாக 2024 ஜூலை 08 ஆம் தேதி வரை பொதுமக்களின் எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
தெரிவித்துள்ளது. 
இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மொழிக் கருத்துகளுக்கான வாய்ப்பு ஜூலை 09, 2024 அன்று நடைபெறும்.
முன்மொழியப்பட்ட கட்டண திருத்தம் தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பின்வரும் முகவரிக்கு அல்லது பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம்.
தொலைநகல் : 011 2392641 மின்னஞ்சல்: consultation@pucsl.gov.lk இணையதளத்திலிருந்து: www.pucsl.gov.lk Facebook கணக்கு: www.facebook.com/pucsl 
 மேலதிக தகவல்களுக்கு 0112392607/8. இந்த இலக்கத்துடன் 
தொடர்பு கொள்ளவும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக