குழந்தை பிரசவித்த சிறுமி யாழில் குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்

சனி, 11 மே, 2024

 

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு
 தப்பிச் சென்றுள்ளார்.
வடமராட்சி- துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது
 சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த
 நிலையில் தனது
 தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக  10-05-2024.அன்று  மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், 
குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு.11-05-2024. இன்று காலை முதல் தாயும், சிறுமியும் தலைமறைவாகியுள்ளனர் என
 தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் காவல் 
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக