மீண்டும் இலங்கை நெருக்கடிக்குள்ளாகும் அபாயம்: விவசாய அமைச்சர் தகவல்

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

கடும் வரட்சி காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 02 வீதமாக குறைந்துள்ளது. 
இதனால் உடவளவ நீர்த்தேக்கத்தின் கீழ் அறுவடை செய்யப்பட்ட 65,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 உடவளவ நீர்த்தேக்கத்திற்கு இரண்டு தவணை நீருக்காக சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து 27 மில்லியன் கனமீற்றர் நீரை 10 நாட்களுக்கு பெற்றுக்கொள்ள விவசாய அமைச்சு முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. 
 அதற்குக் காரணம், தற்போது 87 மில்லியன் கனமீற்றராக உள்ள சமனலேவாவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 60 மில்லியன் கனமீட்டராகக் 
குறைவடைந்தால், இலங்கை மின்சார சபையானது தென் மாகாணத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் மின்சாரத்தை 
துண்டிக்க நேரிடும்.
 எனினும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க ஆகியோர் உடவளவ நீர்த்தேக்கத்திற்கு குறிப்பிட்ட அளவு நீரைப் பெற்றுக்கொடுக்க பலமான முயற்சிகளை மேற்கொண்டதுடன் இதுவரையில் அந்த முயற்சி ஓரளவு வெற்றியடைந்துள்ளது.
 இதன்படி, உடவலவை நீர்த்தேக்கத்தின் கீழ் நீர் பற்றாக்குறையினால் அழிந்து வரும் நெற்செய்கைகளில் இருந்து ஓரளவு நீரை வழங்க மொனராகலை விவசாயிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
 மொனராகலை நீர்ப்பாசனப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 11 குளங்களில் இருந்து 
ஒரு பகுதி வெலி ஓயா அணையின் ஊடாக உடவலவை நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 இதன்படி உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நாளொன்றுக்கு 1200 ஏக்கர் அடி வீதம் நீர் எடுத்துச் செல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மிகக் குறைந்த அளவு நீராக இருந்தாலும், தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் அழிவு 
அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நெற்பயிர்களின் சில 
பகுதிகளை காப்பாற்ற இந்த முயற்சி வழிவகுக்கும் என்றும் விவசாய அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
 எவ்வாறாயினும், உடவளை நீர்த்தேக்கத்தின் கீழ் பயிரிடப்படும் நெற்பயிர்களுக்கு நீர் கிடைக்காவிட்டால் நெற்செய்கையில் 17 பில்லியன் ரூபாவும் மின்சார உற்பத்தியில் 1.6 பில்லியன் ரூபாவும் நட்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
வாழை உள்ளிட்ட ஏனைய பயிர்கள் சேதமடைவதால் ஏற்படக்கூடிய மொத்த நிதி இழப்பு 30,000 மில்லியன் ரூபாவை தாண்டும் என்றும் விவசாய 
அமைச்சர் தெரிவித்தார்.
 இதன் காரணமாக இலங்கை எதிர்காலத்தில் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக