நாட்டில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவது குறித்து அமைச்சர் அறிவிப்பு

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாட்டில்  புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
29-01-2023.இன்று  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.ஜனவரி முதலாம்
 திகதி முதல் 
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான திட்டத்தை நாம் சமர்ப்பித்திருந்தோம். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. இன்றும் கூறுகின்றோம். இன்று அல்லது நாளை அனுமதி வழங்கப்பட்டால், மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கும் திட்டத்தை செயற்படுத்த எமக்கு முடியும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக