நாட்டில் தீவிரமடையும் மின் நெருக்கடி 3 நேர பிரிவுகளாக மின் வெட்டு

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

இலங்கையில் மின்சார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அதற்கமைய இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
நேற்றைய தினம் நாடு முழுவதும் 11 வலையமைப்புகளில் தலா 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. 541 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் 
ஆணைக்குழுவின்
தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “நேற்று இரவு அதிகபட்சமாக 2,150 மெகா வோட் மின்சார தேவை காணப்பட்டது. இரவு நேரத்தில் அதிகபட்ச மின் தேவை 2,700 மெகா வோட் வரை அதிகரிக்கலாம் என்பதால், அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம் வழங்கும் நெருக்கடிக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான எரிபொருள் பற்றாக்குறையும் ஒரு காரணமாகும். மற்றொரு காரணம், நீர்மின் உற்பத்தி மிகவும் குறைவாக 
உள்ளமையாகும். காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 22 வீதமாகவும், சமனல ஏரியின் நீர்மட்டம் 32 வீதத்திலிருந்து 9 வீதமாகவும், மவுஸ்சாகலை 
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 45
வீதத்திலிருந்து 4 வீதமாகவும் குறைவடைந்துள்ளமை நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. ரன்னெகல நீர்த்தேக்கத்தில் மாத்திரம் 50 சதவீதத்திற்கும் அதிகமான நீர்மட்டம் காணப்படுகின்றது. இதனால், அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் க
டும் நெருக்கடி 
ஏற்பட்டுள்ளது. 07 மின் உற்பத்தி நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை.
களனிதிஸ்ஸ சுழற்சி மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெப்தாவும் நேற்று இரவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், தற்போது ஒரு சில மின் உற்பத்தி நிலையங்களில் மாத்திரமே போதுமான எரிபொருள் இருப்பது நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக