நாட்டில் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

வியாழன், 23 டிசம்பர், 2021

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மாவுக்கான தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு நிலவுவதால், வங்கிகள் ஊடாக கடன் கடிதங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்க, உள்நாட்டு பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக