நாட்டில் தபால் திணைக்களத்துக்கு புதிதாக 3,000 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாகாண மட்டத்திலேயே இணைக்கப்பட்டனர் என்று பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையிலேயே புதிதாக ஊழியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
தபால் விநியோகம், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக இவர்கள் தபால் திணைக்களத்தில் இணைக்கப்பட்டனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக