மணிபுரத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சந்தை

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

வவுனியா மணிபுரத்தில் கிராமிய பொதுச்சந்தை,14-02-2021, இன்று திறந்து வைக்கப்பட்டது.சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த சந்தை கட்டிடத்தொகுதி உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் கிராமத்தின் உற்பத்தி 
பொருட்களுக்கான
 சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மணிபுரம் கிராமத்திற்கான மரண ஆதார சங்கமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டித்தினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட இணைத்தலைவருமான கு.திலீபன் திறந்து 
வைத்திருந்ததுடன் குறித்த நிகழ்வில் கிராம சேவகர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பொதுமக்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக