நாட்டில் உயர்தர மாணவர்களுக்கு .ரப் கணிணி அனுமதி

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

நாடளாவிய ரீதியில் உயர் தர மாணவர்களுக்கு ரப் கணிணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி 
அமைச்சு எடுத்துள்ளது.
உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து 1AB பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் ரப் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவீன கல்வியில் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப பாடசாலை கல்வியை உருவாக்கும் அரச வேலைத்திட்டத்தின் கீழ், ரப் கணிணி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர 
இணக்கம் தெரிவித்துள்ளார்.
1 AB பாடசாலைகளில் உள்ள உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து கண்காணிப்புச் செயற்திட்டம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும். அதன் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு மூன்று மாதங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உயர்தர
 மாணவர்களுக்கும் ரப் கணிணி வழங்கல் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
ரப் கணிணி வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்த போகும் முறைமையை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,
 அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்வைக்கவுள்ளார்.
{புத்தகங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு குறைக்கப்படும் புத்தகங்களை
 பாதுகாப்போம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக