நீர்வேலி வடக்கில் இரு வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளை

வெள்ளி, 19 ஜனவரி, 2018

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட நீர்வேலி வடக்கில்  புதன்கிழமை அதிகாலை இரண்டு வீடுகளில் புகுந்த கொள்ளைக் கும் பல் ஆயுதமுனையில் நகைகள் மற்றும் பெறுமதியான பொருள் களை கொள்ளையிட்டுத்
 தப்பித் துச் சென்றுள்ளது.
நீர்வேலி வடக்கு இராசபாதை வீதியுள்ள இரண்டு வீடுகளிலேயே  புதன்கிழமை அதிகாலை 1.30 மணி யளவில் இந்தச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இளம் தம்பதியர் அவர்களது
 குடும்பத்தினரும் வசித்த வீடொன்றுக்குள் புகுந்த கொள் ளைக் கும்பல், இளம் குடும்பத் தலைவரை யும் அவரது சகோதரனையும் தாக்கிவிட்டு 15 பவுண் தங்க நகைகளைக் 
கொள்ளை யிட்டுத் தப்பித்தது.
அந்த வீட்டுக்கு அயலிலுள்ள மற்றொரு வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் அங்கு வசித்த வயோதிபத் தம்பதியரைத் தாக் கிவிட்டு நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை 
கொள்ளையிட்டுத் தப்பித்தது. வயோதிபத் தம்பதிகளுக்குத் துணையாக அவர்களது மகன் தினமும் இரவில் அங்கு சென்று தங்குவார் எனவும்; அன்றைய தினம் அவர் செல்லவில்லை எனவும்  
தெரிவிக்கப் பட்டது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக