கல்முனைக்குடியில் இளைஞன் பலி விபத்தின் பின் கைகலப்பு; !

வெள்ளி, 13 அக்டோபர், 2017

விபத்தின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் கத்தியினால் தாக்கப்பட்டு பலியாகியுள்ளார்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி செய்லான் வீதி, கல்முனைக்குடி 01 யைச் சேர்ந்த உதுமா லெப்பை மொஹமட் சாகிர் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.  
இச்சம்பவம் நேற்று (12) இரவு 10.00 மணியளவில் 
இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் வண்டிகள் மோதியதால் ஏற்பட்ட விபத்தின் போது 32 வயதான கல்முனைக்குடி 05 யைச் சேர்ந்த ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். 
அதன் பின்னர் கல்முனை போக்குவரத்து பொலிஸாரினால் சமாதானம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த பிரதேசத்திற்கு சென்ற காயமடைந்த நபர் விபத்தை ஏற்படுத்திய நபரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, மொஹமட் சாகிர் என்பவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இன்று (13) நள்ளிரவு 1.18 அளவில் மரணமடைந்துள்ளதாக கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் பொலிஸ் காவல் பிரிவில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதான சந்தேகநபர்  கல்முனைப் பொலிஸாரினால் நடைபெற்றுவருவதாகவும்
 குறிப்பிட்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக