கோபமடைந்த ஆலயப் பூசகர் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தார்?

வெள்ளி, 7 ஜூலை, 2017


யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் கோபமடைந்த பூசாரி ஒருவர் மோட்டார் சைக்கிளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (04) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் குறித்த பூசகர் அண்மையில் உள்ள இடம் ஒன்றுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை
 இயக்கியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் இயங்காமையினால் கோபமடைந்த பூசகர் தனது மோட்டார் சைக்கிளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றித் தீ மூட்டியுள்ளார். தீயினால் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து
 சாம்பலாகியுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக