நாட்டில் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கு பற்றாக்குறை நோயாளர்கள் ஆபத்தில்

புதன், 3 ஜூலை, 2024

இதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் காத்திருப்பு காலம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ 
தெரிவித்துள்ளார்.
 நாட்டில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
 ஆனால், நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் இருப்பதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க 
வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளின் உயிருக்கு 
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 சில வைத்தியசாலைகளில் காத்திருப்போர் பட்டியல் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்குமெனவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி
 அரச மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து சத்திர சிகிச்சைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியது அவசியம் எனவும் 
அவர் தெரிவித்தார்.  என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கு பற்றாக்குறை நோயாளர்கள் ஆபத்தில்

நாட்டில் கண்டி நீதிமன்றத்தை கதி கலங்கச் செய்தவர் கைது

செவ்வாய், 2 ஜூலை, 2024

நாட்டில் கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை 
பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஜூலை 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து பொலிஸார் உடனடியாக 
நடவடிக்கையில் இறங்கின​ர்.
இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டனர். ஸ்தலத்துக்கு விரைந்த வெடிகுண்டு 
செயலிழப்பு பிரிவு நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்படவில்லை.  என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கண்டி நீதிமன்றத்தை கதி கலங்கச் செய்தவர் கைது

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அம்பது இலட்சம் ரூபாய மோசடிசெய்த பெண் கைது.

திங்கள், 1 ஜூலை, 2024

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி , 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞனிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தினை மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட வேளை, அதனை கொடுக்க மறுத்ததால், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 
பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணை கைது செய்து , விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அம்பது இலட்சம் ரூபாய மோசடிசெய்த பெண் கைது.