இலங்கையில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின் மின் வெட்டு இல்லை

சனி, 21 ஜனவரி, 2023

இலங்கையில் உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபையின் தேவைகளையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்றும் (21) நாளையும் (22) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக