நாட்டில் ஜனவரி மாதம் முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய நேர உணவு

புதன், 16 நவம்பர், 2022


நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இனி மதிய நேர உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழமையை போன்று தேவையான அளவு உணவுக் கிடைப்பதில்லை என்பதனை அமைச்சர் நாடாளுமன்றில் முன்னதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமையவே மதிய உணவுத்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக