இலங்கையில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லையாம்

திங்கள், 5 செப்டம்பர், 2022


கோதுமை மா உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இன்று காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கோதுமை மாவுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது நடைமுறைச் சாத்தியமில்லை எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் கேள்வியை பூர்த்தி செய்வதற்கு துருக்கி மற்றும் டுபாயிலிருந்து கோதுமை மா இறக்குமதிசெய்ய அங்குள்ள ஏற்றுமதியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளுடன்
 முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு காரணமாக சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் கூட கோதுமை மாவின் சில்லறை விலை அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் சில்லறை விலை சில்லறை விலை ரூ. 360 – 380 ஆக காணப்படும் நிலையில் மொத்த விலை 350முதல் 400 ரூபா வரை காணப்படுவதாக விற்பனையாளர்கள் 
தெரிவிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக