இலங்கை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

செவ்வாய், 19 ஜூலை, 2022

பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் 
தெரிவித்துள்ளது.
டீசல், எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், இவ்வாறு பாணின் விலையை குறைக்கமுடியும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே சங்கத்தின் தலைவர் ஜயவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதுவேளை, எரிபொருள் விலைக்குறைப்பைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் 2.23 சதவீதத்தினால் குறைவடையும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் 
தெரிவித்துள்ளார்.
அதன்படி 40 ரூபாவாக இருந்த ஆரம்பக்கட்டணம் 38 ரூபாவாகக் குறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாறாக உயர்வான கட்டணம் அறவிடப்ப
$டும் பட்சத்தில் அதுகுறித்து பயணிகள் 1955 என்ற இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு அளிக்க முடியும் பேருந்து பயணிகளுக்கு 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>








0 கருத்துகள்:

கருத்துரையிடுக