இலங்கையர்களை தலை சுற்றவைக்கும் எரிபொருள் விலை உயர்வு

வெள்ளி, 17 ஜூன், 2022

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 210 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித
 தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ஏனைய எரிபொருட்களின் விலைகளையும் 60 ரூபாவிற்கும் அதிகமாக உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி, எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24ம் திகதி நடைமுறைக்கு வர வேண்டும். இறுதியாக எரிபொருள் விலை அதிகரிப்பு மே 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
எதிர்வரும் 24ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை74 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 78 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 56 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 65 ரூபாவாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் பொருளாதாரம் சீராக இயங்க தினமும் 6,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 5,000 மெட்ரிக் தொன் பெற்றோல் 
தேவைப்படுகிறது.
இதன்படி, 5,500 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 11,000 மெட்ரிக் தொன் டீசல் தற்போது இலங்கை பெற்றோல் கூட்டுதாபனத்தில் சேமிப்பு வசதிகளில் இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெடரிக் தொன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக