நாட்டில் மேலும் மேலும் அதிகரிக்கப்படும் மின்வெட்டு நேர அறிவிப்பு

வெள்ளி, 6 மே, 2022

நாட்டில் தற்போ நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நேரம் மேலும் நீடிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் ஐந்து மணித்தியாலம் வரை இவ்வாறு மின்வெட்டு நீடிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் 
நிலையம் தேசிய மின்வட்டத்திற்கு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
270 மெகாவோட் எண்ணெய் இழப்பை ஈடுகட்டுவது 
நஷ்டம் என்றும், அந்தத் திறனை நீர்மின்சாரத்தில் 
இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 
பொறியாளர்கள் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.இது தொடர்பில் மகாவலி அதிகாரசபையுடன் கலந்துரையாடப்பட்ட போதும் அவர்கள் அதில் அதிக அக்கறை காட்டவில்லை எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
சமனல வெவ மற்றும் லக்சபான நீர் மின் நிலையத்திலிருந்து இழந்த இந்த கொள்ளளவை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை 
மின்சார சபை தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக