பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் யாழில் மீட்பு

சனி, 30 ஏப்ரல், 2022

யாழில்  பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின் 
 போது வர்த்தக நிலையத்தில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் பொலிசாரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு சரியான விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அவ் வர்த்தகருக்கு எதிராக வழக்கும் 
பதிவு செய்யப்பட்டது.
மேலும் இவ்வாறாக எரிவாயுவினை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என்பதனை வர்த்தகர்களுக்கு பாவனையாளர் அதிகார சபை 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் யாழில் மீட்பு

நாட்டில் மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம்

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

 

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோஷ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் 
தெரிவித்துள்ளார்.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் திரிபோஷ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே திரிபோஷ நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டில் மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் சுற்றி வளைப்பில் 8 பேர் கைது

வியாழன், 28 ஏப்ரல், 2022

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு 
தெரிவித்துள்ளது.
மீகொட, ஏகொடஉயண, அநுராதபுரம், கல்கிஸை, நீர்கொழும்பு, அங்குலானை, மிஹிஜய செவன ஆகிய இடங்களிலேயே இந்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் சுற்றி வளைப்பில் 8 பேர் கைது

மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசை

புதன், 27 ஏப்ரல், 2022

யாழ் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
27-04-2022.இன்று காலையிலிருந்து விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள இன்று பிற்பகல் ஏழு மணியை தாண்டியும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
இதில் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் சமயல் மற்றும் இதர தேவைகளுக்காகவே மக்கள் இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய்யை பெற்றுகொள்கின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசை

நாட்டில் அதிகரிக்கிறது மின்சார கட்டணம் ஆணைக்குழுவின் அங்கீகாரம்

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய மின் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக 
குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாக 
அறியமுடிகின்றது.
தேவையானவர்கள் இதனையும் சேமித்து வையுங்கள்!!!

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் அதிகரிக்கிறது மின்சார கட்டணம் ஆணைக்குழுவின் அங்கீகாரம்

நாட்டில் பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு மக்களுக்கு பேரிடியான செய்தி

திங்கள், 25 ஏப்ரல், 2022

நாட்டில் எதிர்வரும் நாட்களில் பால் மாவுக்கான விலையை கணக்கிட்டு புதிய விலை நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் கையிருப்பு தீர்ந்து 
வருகின்ற நிலையில்,
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்கான காரணம் எனவும் அந்நிறுவனங்கள்
தெரிவித்துள்ளன.இதேவேளை, 400 கிராம் பால் மா பொதியின் விலை 1000 ரூபாவிற்கும் அதிகமாகவும், ஒரு கிலோ பால் மா பாக்கெட் 2500 ரூபாவை தாண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது 400 கிராம் பால் மா பாக்கெட் 790 ரூபாவிற்கும், ஒரு கிலோ பாக்கெட் 1945 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு மக்களுக்கு பேரிடியான செய்தி

நாட்டில் எரிபொருள் விநியோக பணியில் புதிய மாற்றம்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

நாட்டில் எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையினை முறையாக மேற்கொள்வதற்காக மத்திய நிலையம் ஒன்றை நிறுவவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போது இணை நிறுவனங்கள், இராணுவம், விமானப்படை, பொலிஸார், ரயில் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் இந்த மத்திய நிலையம் அமைக்கப்படும்.
மக்கள் ஒன்றுகூடுவதனாலும் வீதிப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதினாலும் கடந்த தினங்களில் எரிபொருள் கொண்டு செல்லும் பணிக்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் மேலும் 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் நாட்டிற்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் எதிர்வரும் சில தினங்களுக்குள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும்
 குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் எரிபொருள் விநியோக பணியில் புதிய மாற்றம்

நாட்டில் அடுத்த வாரத்தில் இருந்து பால் மாவின் விலை அதிகரிக்குமா

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சில இறக்குமதியாளர்களும் டொலர் நெருக்கடி காரணமாக சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்,
மேலும் பால்மா அடுத்த வாரம் நாட்டுக்கு வரவிருக்கும் நிலையில், பங்குகள் வந்த பிறகு விலை அதிகரிப்பு குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ பால் மாவின் விலையை 1,345 ரூபாவிலிருந்து 1,945 ரூபாவாகவும், 400 கிராம் பால் மாவின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அண்மையில் அதிகரிக்கப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
READ MORE - நாட்டில் அடுத்த வாரத்தில் இருந்து பால் மாவின் விலை அதிகரிக்குமா

நாட்டில் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் அறிவிப்பு

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

நாட்டில் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக வாகன சாரதிகளுக்கு 
அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிள்களுக்கு 1000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1500 ரூபாவுக்கும், கார், சிற்றூர்திகள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு 5,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிப்பது என இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்திருந்தது.
எனினும் பேருந்துகள், பாரவூர்திகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகளையும் நீக்குவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் அறிவிப்பு

தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கலாம்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,974 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 முதல் 2020 டொலர்கள் வரை உயரும் என்றும் ஆய்வாளர்கள்
 கணித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கலாம்

நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கைப்பற்றல்

சனி, 16 ஏப்ரல், 2022

இலங்கையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காவல்துறையினரும் , நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.
12.5 கிலோகிராம் எடைக்கொண்ட 177 கொள்கலன்களும், 5 கிலோகிராம் எடைக்கொண்ட 28 கொள்கலன்களும், 2.5 கிலோகிராம் எடைகொண்ட 25 கொள்கலன்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த எரிவாயு கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

READ MORE - நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கைப்பற்றல்