ஜோதிடத்தில் 30 வருடத்திற்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்கு அதிர்ஷ்டம்

புதன், 26 ஜனவரி, 2022

ஜோதிடத்தில், நவகிரகங்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது ஒருவரின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கும். அதில் ஒன்பது கிரகங்களும் சீரான இடைவெளியில் ராசியை 
மாற்றுகின்றன.
இதில் நீதிமான் சனியின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒன்பது கிரகங்களில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியது. இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற எடுத்துக் கொள்ளும் காலம் இரண்டரை 
வருடங்கள் ஆகும்.
சனி பெயர்ச்சி 2022அந்த வகையில் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். 30 வருடங்களுக்கு பிறகு சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். சனி ராசியை மாற்றுவதால், சில 
ராசிக்கு ஏழரை சனி தொடங்குவதோடு, சிலருக்கு அஷ்டம, அர்தாஷ்டம சனி 
ஆரம்பமாகிறது. சிலர் சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். 30 வருடங்களுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல அற்புதமான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்வில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் நிதி நிலை உயரும். புதிய வேலை கிடைப்பதற்கான வலுவான 
வாய்ப்புக்கள் உள்ளன. வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். மேலும் இக்காலம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான
 காலம். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உங்கள் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், 
இந்த சனி பெயர்ச்சியால் உங்களுக்கு அனைத்துவிதமான ஆடம்பரங்களும், சுகபோகங்களும் நிறைந்திருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வெளியூர் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, 
அவர்களின் விருப்பம் நிறைவேறும். 
இக்காலத்தில் உங்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு அதிகமாக கிடைக்கும். மேலும் உங்கள் பணத்தை அதிகமாக சேமித்து வைப்பதற்கான 
வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். எப்போதும் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். நிலம், வீடு போன்றவற்றை வாங்குவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கப்படும்.
தொழிலதிபர்கள் தங்களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு சாதகமான காலமாக இருக்கும். புதிய தொழிலில் பணத்தை முதலீடு செய்ய நினைப்பீர்கள். மேலும் எவ்வித மரியாதையையும் இவர்கள் இழக்கமாட்டார்கள். சட்ட விஷயம் தொடர்பான முடிவுகள் இந்த ராசிக்காரர்களுக்கு 
சாதகமாக இருக்கும்.
தனுசுதனுசு ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதால் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மேலும் சனி பகவானின் சிறப்பான அருள் இந்த ராசிக்காரர்கள் மீது
 இருக்கும். பணியிடத்தில் நல்ல பதவி உயர்வு மற்றும் பண உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான 
வாய்ப்புக்களும் உண்டு

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக