யாழில் தங்கப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

புதன், 29 டிசம்பர், 2021

யாழில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களின் 3 ஆயிரம் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இன்றைய தினம் ஒரு பவுண் தங்கம் (22 கரட்) ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 950 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக பதிவாகியிருந்தது. 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் டொலருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தங்க இறக்குமதியும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - யாழில் தங்கப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

இலங்கையில் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

செவ்வாய், 28 டிசம்பர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்.28-12-2021- இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்
 காணப்படுகின்றது.
மேற்படி பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டில் கடும் மின்வெட்டு

திங்கள், 27 டிசம்பர், 2021

இலங்கை எதிர்வரும் ஜனவரி மாதம் திட்டமிட்ட மின்வெட்டுக்களை எதிர்கொள்ளவுள்ளது என்றும், இது தொடர்பில் இலங்கை மின்சார சபை, அரசுக்கு எச்சரித்துள்ளது என்றும், தெரியவருகின்றது.அனல் மின் உற்பத்திக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், மின் துண்டிப்பை தவிர்க்க முடியாது என்று மின்சார சபை 
சுட்டிக்காட்டியுள்ளது.
அனல் மின் நிலையத்துக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை மின்சார சபை கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. டொலர் கையிருப்பு இல்லாமையால் தேவைப்படும் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாது உள்ளது.
தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் எதிர்பார்க்கபட்டுள்ள எரிபொருள் ஆகியவை எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானது என்ற நிலையில், எரிபொருள் இறக்குமதியே தற்போதுள்ள வழி என்று தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் இருப்புக்களைப் பேணுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஜனவரி மாதம் முதல் இலங்கை கடுமையாக மின் துண்டிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தி சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியொன்றில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டில் கடும் மின்வெட்டு

நாட்டில் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

வியாழன், 23 டிசம்பர், 2021

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மாவுக்கான தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு நிலவுவதால், வங்கிகள் ஊடாக கடன் கடிதங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்க, உள்நாட்டு பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

வடமராட்சியில் திடீரென இடிந்து விழுந்த தேவாலய முகப்பு இளைஞன் படுகாயம்

வியாழன், 16 டிசம்பர், 2021

யாழ்.வடமராட்சி கிழக்கு – புல்லாவெளி பகுதியில் உள்ள செஸ்த்தியார் தேவாலய முகப்பு பகுதி  இன்றைய தினம் அதிகாலை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தேவாலயத்திற்கு நேற்றய தினம் வருகைதந்திருந்த குடும்பம் ஒன்று அங்கேயே தங்கியிருந்த நிலையில்16-12-2021. இன்று வியாழன் அதிகாலை 5.30 மணியளவில்
தேவாலயத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்திருக்கின்றது. இதன்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தசம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் 
சேதமடைந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





READ MORE - வடமராட்சியில் திடீரென இடிந்து விழுந்த தேவாலய முகப்பு இளைஞன் படுகாயம்

நாட்டில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

திங்கள், 6 டிசம்பர், 2021

இலங்கையில் 08-12-2021.எதிர்வரும் புதன்கிழமை முதல் மின்சார விநியோக நடவடிக்கை முழுமையாக வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதிக மின்சார கோரிக்கை இல்லாமையினால் நேற்றைய தினம் மின்சார தடை ஏற்படவில்லை என அதன் கட்டுப்பாட்டாளர் எம்.ஆர்.ரணதுங்க (MR Ranatunga) தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் பல பிரதேசங்களில் மின்சார விநியோக தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்