நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு அவலம் வைரலாகும் புகைப்படங்கள்

வியாழன், 18 நவம்பர், 2021

நாட்டில் தற்போது பாரிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாழும் மக்கள் இதனால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.
அண்மைக்காலமாக நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிவுவதால், மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிவாயு விற்பனை நிலையங்களிலும் நீண்ட வரிசையில் 
காத்து நிற்கின்றனர்.
அதோடு ஒருபக்கம் சடுதியாக அதிகரிக்கும் விலை உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, எரிவாயு தட்டுப்பாட்டினால் மின் அடுப்பு மற்றும் மண்ணெண்ணை அடுப்பு என்பவற்றுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் நகர் பகுதிகளில் உள்ள மக்கள் ரைஸ் குக்கர் மூலம் சோறு சமைப்பது, கறி சமைப்பது, பால் காய்ச்சுவது என அனைத்து சமையல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கூறப்படுகின்ற நிலையில் அது குறித்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் 
வைரலாகியுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக