நாட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

புதன், 6 அக்டோபர், 2021

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லையை 60ஆக மாற்ற தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.அதன்படி, வேலைவாய்ப்பு நீக்கச் சட்டத்தைத் திருத்தும் திருத்தப்பட்ட 
அமைச்சரவை பத்திரம்
வெளியிடப்பட்ட பிறகு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.55 வயதை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 57ஆகவும், 52 வயதுக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு
 60 வயதாகவும் இந்த
சட்டம் முன்மொழியப்படவுள்ளது.இதேவேளை தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதிய வயது முன்பு 55ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக