நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அதிரடி உத்தரவு.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

எரிபொருள் விலையை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது..11-10-2021.அன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வடைவதாகவும், டொலர் பற்றாக்குறை பிரச்சினை இருப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.இதனால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், எரிபொருட்களின்
 விலைகளை உயர்த்த
வேண்டுமெனவும் அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.எனினும் இன்று, நாளை எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக