நாட்டில் விரைவில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என அறிவிப்பு

திங்கள், 11 அக்டோபர், 2021

விரைவில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்தை சந்தித்து வருவதால், எரிபொருட்களின் விலைகளை கட்டாயம் அதிகரிக்க வேண்டு் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கூறியுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாகவும் இந்த நஷ்டத்தை ஈடு செய்ய விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் இதற்காக அமைச்சரின் அனுமதியை கோரியுள்ளதாகவும் விஜேயசிங்க 
குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தினால் நாட்டில் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் எரிபொருள் விலையேற்றம் அதிகரிக்கப்படுமாயின் பொது மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்று எதிர்கட்சியினர் கடுமையாக சாடியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக