நாட்டில் வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

வெள்ளி, 1 அக்டோபர், 2021

இலங்கையை சுற்றிய குறைந்த அளவிலான வளிமண்டல குழப்ப நிலைக் காரணமாக இன்றும் நாளையும், இலங்கைத் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மிமீக்கு மேல் கனமழையை எதிர்பார்க்கலாம். மற்ற இடங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கு மேல் பலத்த மழை
பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக