காரைநகரில் கொரோனா அச்சத்தால் இழுத்து மூடப்பட்ட பாடசாலை

திங்கள், 30 நவம்பர், 2020

யாழ் காரைநகர் இந்துக் கல்லூரி மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
காரைநகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு 
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், குறித்த தொற்றாளருடன் காரைநகர் இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் பழகியுள்ளார்.இவர் கடந்த 
கிழமை பாடசாலைக்கு சமூகம் கொடுத்துள்ளார்.இவருக்கு 
எதிர்வரும் 02.12-20.புதன்கிழமை PCR பரிசோதனை 
மேற்கொள்ளப்படவுள்ளது. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால் எதிர்வரும்.03-12-20.வியாழக்கிழமை 
வழமைபோல் பாடசாலை நடைபெறும் எனவும், அதுவரை எதிர்வரும் புதன்கிழமை வரை பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் 
அறிவிக்கப்பட்டுள்ளன

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - காரைநகரில் கொரோனா அச்சத்தால் இழுத்து மூடப்பட்ட பாடசாலை

..யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவர் புயல்அறிவித்தல்

புதன், 25 நவம்பர், 2020

வடமாகாணத்தில் பலத்த காற்று வீச கூடும் இதனால் மின்வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால்,உடனடியாக 
மின்சார சபைக்கு
 அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து 
சமூக நலன் பேணவும்.
அத்துடன் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது 
கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி 
இலக்கங்களுடன் தொடர்பு
 கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் 0212222609, திருநெல்வேலி, கோண்டாவில் 0212222498,
சுன்னாகம் 0212240301, சாவகச்சேரி 0212270040, பருத்தித்துறை 0212263257
வட்டுக்கோட்டை 0212250855,வேலணை 0212211525 ஆகிய 
இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் 
தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - ..யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவர் புயல்அறிவித்தல்

கோழி பண்ணை உரிமையாளர்கள் உணவு தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு

புதன், 18 நவம்பர், 2020

விலங்கு உணவு தட்டுப்பாடு காரணமாக அம்பலாங்கொடை, பலபிட்டிய மற்றும் அஹூங்கல்ல ஆகிய பகுதிகளில் வாழும் சிறியளவான கோழி பண்ணை உரிமையாளர்கள் இன்னல்களுக்கு 
முகம்கொடுத்துள்ளனர்.
முட்டையிடும் கோழிகள், நிறுவனங்களினால் வழங்கப்படும் தீவகத்திற்கு மாத்திரம் பழக்கப்பட்டுள்ளதாக அவர்கள் 
தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் 2 வார காலமாக கோழி தீவகப் பணிகள் தடைப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தீவகம் இன்றி கோழிகள் இறந்து 
வருவதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வர்த்தக அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை செலுத்த முடியாது கடும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பலாங்கொடை, பலபிட்டிய மற்றும் அஹூங்கல்ல ஆகிய பகுதிகளில் வாழும் சிறியளவான கோழி பண்ணை உரிமையாளர்கள் 
கோரியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - கோழி பண்ணை உரிமையாளர்கள் உணவு தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு

யாழ் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை

திங்கள், 16 நவம்பர், 2020

உடுவில் மகளீர் கல்லூரியின்  15.11-20.அன்று  வெளியாகிய புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி உடுவில் மகளீர் கல்லூரியில் 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1,அபிஷனா கோபிநாத் 193
2,ஹரிஷ்ராம் சிவானந்தன் 191
3,நயனிதா கன்ஸ்வரன் 186
4,பரிதிவராண் கிருஷ்ணகுமார் 184
5,ஷஜானா விக்னராஜா 183
6,கிதாரா தயானந்தன் 182
7,சதுர்த்தியன் ஜெயராஜ் 182
8,அக்ஷரன் உதயமோகன் 181
9,ரெந்துஷன் சர்வேஸ்வரன் 180
10,சண்முகராகவன் ராஜகுமாரன் 179
11,ரித்திகா உதயகுமார் 178
12,அபினாஷ் கசேந்திரன் 178
13,ஜெப்ரின் தர்மராஜ் பிராங்க் அன்செலன் 177
14,அஷ்மிதா சுதர்ஷன் 177
15,தனுஜா அருலேஸ்வரன் 176
16,அனிஷாந்த் திருப்பதிகாந்தன் 176
17,பிரஜீன் பிரபாகரன் 176
18,அனுஹர்சன் துஷாந்த் 176
19,கவிஷ்கா வர்ணராஜா 175
20,கிருத்திகா சொரூபன் 174
21,பிரம்மநஸ்பதன் சசிவர்னன் 174
22,பிரியங்கா பரசுதன் 172
23,பர்மினி சசிகுமார் 172
24,தர்ஷனா நந்தகோபன் 172
25,தீபிகா சிவானந்தன் 172
26,யஷானா திவாகரன் 172
27,ஜஷ்மியா நித்தியானந்தம் 171
28,ஹரினி சசிகாந்த் 170
29,கேஷிகன் பாலிங்கன் 170
30,சதுஸ்ரிகா கஜேஸ்வரன் 169
31,ஜெஷாம் ஜெசிந்தன் 168
32,தரண்யா செந்தூரன் 167
33,அபினா சதீஸ்வரன் 167
34,அஷ்லின் முகுந்தன் 167
35,ஷர்மிளா ஸ்ரீகாந்தன் 166
36,சுவேத்தா பெனார்ட் 164
37,ரதுர்சன் சிவகுமார் 164
38,பொன்பிலியா டன்ஸ்டன் 163
39,லூர்து தாரா பட்ரிக் அஹிலன் 163
40,அக்சிகா சுரேந்திரன் 163
41,மதுவர்ஷா ரஜீத்காந்த் 162
42,கம்ஷாபி பிரபாகரன் 161
43,விகாஷினி செந்தூரன் 161
44,அனுஜிதா தயாபரன் 160
45,தர்ஷானி ஜெயந்தன் 160
சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இந்த இணையத்தின்
 நல் வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - யாழ் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை

காலி சங்கமித்த கல்லூரி மாணவிகள் 200 புள்ளிகளை பெற்றுள்ளார்

ஞாயிறு, 15 நவம்பர், 2020

வெளியாகியுள்ள 2020ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி ஐந்துமாணவர்கள் 200 புள்ளிகளை பெற்று
 சாதித்துள்ளனர்.
இதன்படி காலி சங்கமித்த கல்லூரி மாணவி எஸ்.டி. சியதி வி.சந்துன்டி கருணாதிலக 200 புள்ளிகளையும்,
மற்றும் வேறு பாடசாலைகளை சேர்ந்த எம்.எப்.மொஹமட் அம்மார், அ.எச்.சிஹத் சந்தினு மேலும் இரு மாணவர்களும் 200 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இதற்கு முன்னர் 2007ம் ஆண்டில் மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றிருந்தார். அதற்கு பின்னர் 200 புள்ளிகள் பெறப்பட்ட இரண்டாவது மற்றும் ஐந்து மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்ற முதலாவது 
சந்தர்ப்பமும் இதுவாகும்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - காலி சங்கமித்த கல்லூரி மாணவிகள் 200 புள்ளிகளை பெற்றுள்ளார்