பாெருட்களுக்கு திடீர் விலை உயர்வு வாழைச்சசேனையில் மக்கள் குற்றச்சாட்டு

சனி, 31 அக்டோபர், 2020

 மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டத்தையடுத்து கடந்த ஏழு தினங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணாமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத்தரப்பினர், அரச அலுவலர்கள் அடங்கிய கொரோனா தடுப்புச் செயலணி தம்மால் முடிந்த அத்தனை உதவிகளையும் இரவு, பகல் பாராது 
மேற்கொண்டு வருகிறது.
அதே நேரம், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் 15 நாட்களுக்குத் தேவையான பொருட்கள் கையிலிருப்பில் உள்ளதாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது வர்த்தக சங்கத்தினர் 
தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு சில வியாபாரிகள் கோழி, தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட அதிகரித்துள்ளதாகவும், குறிப்பிட்ட சிறுதூர இடைவெளியில் இரு
 பிரதேசங்களுக்கிடையில் பொருட்களின் விலையில் பாரிய வித்தியாசம் உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பொது மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோரும் பொது மக்களும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் 
தவித்துக் கொண்டிருக்கும்
 நிலையில், நாளாந்தம் கூலித் தொழிலில் ஈடுபடுவோர், அன்றாடம் வியாபாரம் செய்வோரும் தமது வருமானத்தை இழந்துள்ள
 இந்த இக்கட்டான நிலையில், இவ்வாறான விலை அதிகரிப்புக்கள் மென்மேலும் சுமையை 
அதிகரிக்கச் செய்துள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 


 

READ MORE - பாெருட்களுக்கு திடீர் விலை உயர்வு வாழைச்சசேனையில் மக்கள் குற்றச்சாட்டு

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து 35 பேர் மருத்துவ பீடத்துக்குத் தெரிவு

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து இம்முறை 181 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி 12 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 35 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும் தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 181 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு
 தெரிவாகியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

READ MORE - யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து 35 பேர் மருத்துவ பீடத்துக்குத் தெரிவு

கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளி கைது

வெள்ளி, 23 அக்டோபர், 2020

கண்டி – கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி .23-10-20.இன்று மதியம் கொழும்பு – பொரளை கட்டடத் தொகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே கொஸ்கம, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 
நிலையில் 23-10-20.இன்று அதிகாலை தப்பிச் சென்றிந்தமை
 குறிப்பிடத்தக்கது




READ MORE - கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளி கைது

முனைக்காடில் சட்டவிரோத மது நிலையம் சுற்றிவளைப்பு; நால்வர் கைது

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நூதனமான முறையில் இயங்கிவந்த
 சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம்.22-10-20. அன்று   இரவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்து பெருமளவான மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன. 
இதன்போது 170 மில்லி லீற்றர் அளவு கொண்ட 750 மதுபான போத்தல்களும், பெரியளவிலான 48 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டது.
அத்துடன் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் 
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - முனைக்காடில் சட்டவிரோத மது நிலையம் சுற்றிவளைப்பு; நால்வர் கைது

செட்டிக்குள பஸ் தரிப்பு நிலையத்தில் மரம் முறிந்ததில் பேரூந்துக்கு சேதம்

வியாழன், 15 அக்டோபர், 2020

 செட்டிக்குளம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா 
சாலைக்குச் சொந்தமான பேரூந்தின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பேரூந்து பாரிய
 சேதத்துக்குள்ளாகியது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

READ MORE - செட்டிக்குள பஸ் தரிப்பு நிலையத்தில் மரம் முறிந்ததில் பேரூந்துக்கு சேதம்

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதிவரி நீக்கம்

செவ்வாய், 13 அக்டோபர், 2020

நாட்டில்அத்தியாவசிய பொருட்களுக்கான
இறக்குமதி வரி.13-10-20. இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி பருப்பு, மீன்டின், பெரிய வெங்காயம், சீனி உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அமுலாகவுள்ளது.
எனவே மீன்டின் ரூ.200, பெரிய வெங்காயம் ரூ.100, சீனி ரூ.85 ஆகிய விலைக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதிவரி நீக்கம்

பரீட்சைகள் திட்டமிட்டபடியே நடக்கும் திகதிகளில் மாற்றமில்லை

புதன், 7 அக்டோபர், 2020

நாட்டில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சை என்பன திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு .07-10-20.இன்று  தமது இறுதி முடிவை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா சமூகத் தொற்றின் இரண்டாம் அலை வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் பரீட்சைகள் தொடர்பில் குழப்பம் எழுந்திருந்தது.
இன்றை அறிவிப்பின்படி திட்டமிட்டவாறு ஒக்டோபர் 11ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
அத்துடன் 12ம் திகதி உயர்தர பரீட்சை 
ஆரம்பிக்கப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - பரீட்சைகள் திட்டமிட்டபடியே நடக்கும் திகதிகளில் மாற்றமில்லை

கொரோனா அச்சம் கொழும்பு கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது

ரோயல் கொழும்பு கோல்ப் கிளப் கார்டன் ஊழியரின் மகள் மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால் கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது.
கோல்ப் கிளப் கார்டனில் பணியில் ஈடுபடும் ஒருவர் கடந்த சனிக்கிழமை வரை கடமைக்கு வந்துள்ளதால் அவருடன் நெருக்கமாக பழகியோர தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் 
இடம்பெறுகின்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - கொரோனா அச்சம் கொழும்பு கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது