பெண்கள் விடுதிக்குள் மருத்துவர் வேடமிட்டு நுழைய முயற்சித்த இந்தியப் பிரஜை கைது

திங்கள், 27 ஜூலை, 2020

வைத்தியர்போல நாடகமாடி வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.இந்தச் சம்பவம் நிட்டம்புவ- வத்துப்பிட்டிவெல தள வைத்தியசாலையில் இடம்பெற்றிருக்கின்றது.
 கடந்த சனிக்கிழமை குறித்த இந்தி பிரஜை வைத்தியசாலையின் பெண்கள் விடுதிக்குள்மருத்துவ உபகரணங்களை ஒரு பையில் வைத்துக் கொண்டு நுழைந்துள்ளார். இதன்போது பாதுகாப்பு 
ஊழியர்களும், வைத்தியசாலை ஊழியர்களும் தடுத்தபோது,தாம் ஒரு நோயாளியை சந்திக்கவுள்ளதாகவும், தன்னை
 மருத்துவர் என்றும் கூறியுள்ளார்.எனினும் 
மருத்துவர்கள் பரிசோதிக்கும் நேரம் நிறைவடைந்ததுடன், குறித்த நபர் மீது 
சந்தேகமும் எழுந்ததை தொடர்ந்து,
வைத்தியசாலையினால் பொலிஸாருக்க தகவல் வழங்கப்பட்டது. இதன்பின்னர் சம்பவ 
இடத்திற்கு வந்த பொலிஸார் அந்த நபரை அழைத்து விசாரித்தபோது அவர் ஒரு இந்திய பிரஜை என்பதும்,அவர் வைத்தியர் அல்ல என்பதும் தொியவந்ததுடன், திஹாரியாவில் இலங்கை 
பெண்ணை மணந்து வாழ்ந்து 
கொண்டிருப்பதும் தொியவந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுஎதிர்வரும் 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


READ MORE - பெண்கள் விடுதிக்குள் மருத்துவர் வேடமிட்டு நுழைய முயற்சித்த இந்தியப் பிரஜை கைது

கொரோனா பொலன்னறுவையிலிருந்து யாழ் வந்தவருக்கு

திங்கள், 13 ஜூலை, 2020

யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தம் வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் 
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
அவர் கடந்த சனிக்கிழமையே பொலன்னறுவையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
கொரோனா அறிகுறிகளுடன் எழுவைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தற்போது 
அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இன்று இரவு பரிசோதனை முடிவு வெளியாகும். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவருடன் தொடர்புடையவர்கள் எழுவை தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - கொரோனா பொலன்னறுவையிலிருந்து யாழ் வந்தவருக்கு

நாட்டில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 1937 பேருக்கு வழக்கு

புதன், 1 ஜூலை, 2020

2019 மே மாதத்திலிருந்து 2020 மே மாதம் வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, நீதிமன்ற தீர்ப்பின் படி அபராதத் தொகையாக 59 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார 
சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால், விசாரணை குழு மற்றும் பொலிஸாருடன் இணைந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆண்டுதோறும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொள்ளப்படுவதால் இலங்கை மின்சார சபைக்கு 100 மில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அநேகமானோர் பயிர்ச் செய்கைகளை விலங்குகளிடம் பாதுகாப்பதற்காக இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதாக 
தெரியவந்துள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதற்கு முயற்சிப்பதனால் ஆண்டுதோறும் 100 தொடக்கம் 150 பேர் வரையில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றனர் என மின்சார சபை
 தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 1937 பேருக்கு வழக்கு

நாட்டில் முன்பள்ளிகள் ஆரம்பிப்பு தொடர்பான அறிவிப்பு

அனைத்து முன்பள்ளிகள் மற்றும் 1ம், 2ம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும்.
இதனை கல்வி அமைச்சு.01-07-20. இன்று (01) சற்றுமுன் 
தெரிவித்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் முன்பள்ளிகள் ஆரம்பிப்பு தொடர்பான அறிவிப்பு