முக்கியமான அறிவிப்பு யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை டிசம்பர் (31.12.19) ஆம் திகதி முதல் நிறுத்த ரயில்வே துறை தீர்மானித்துள்ளது.அதன்படி, 87 மற்றும் 88 ரயில்கள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படாது. பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக
 இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டை மற்றும் தலைமன்னார் இடையே இயக்கப்படும்.
ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கும் இந்த இரண்டு ரயில்கள் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:25 மணிக்கு தலைமன்னாரை சென்றடையும்.இந்த ரயில் தனது பயணத்தை மீண்டும் தலைமன்னாரில் இருந்து இரவு 8:25 மணிக்கு ஆரம்பித்து காலை 4:40 மணிக்கு கொழும்பு, கோட்டையை 
வந்தடையும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - முக்கியமான அறிவிப்பு யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு

இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் படுகாயம் வேப்பங்குள கோர விபத்தில்

வெள்ளி, 13 டிசம்பர், 2019

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் 12.12. 19.இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு இராணுவத்தினர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
 பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புளியங்குளம் பகுதியிலிருந்து வவுனியா திசை நோக்கிச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் வாகனம் ஒன்றில் மோதியதிலேயே 
விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் நான்கு இராணுவத்தினரும், மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் படுகாயம் வேப்பங்குள கோர விபத்தில்

நாட்டில் இறக்குமதியாகும் கோதுமை மாவின் வரி குறைப்பு

ஒரு கிலோகிராம் அரிசியின் சில்லறை விலையை 98.00 ரூபாவாக வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.மூன்றுமாத காலப் பகுதிக்குத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு
 அரிசியை விநியோகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.சந்தையில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறைப்பதற்கு ஏதுவாக, இறக்குமதி 
செய்யப்படும் கோதுமை மாவிற்கான வரியை சிறியளவில் குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே 
இதனைக் கூறியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - நாட்டில் இறக்குமதியாகும் கோதுமை மாவின் வரி குறைப்பு

தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள். குவியும் வாழ்த்துக்கள்

வியாழன், 12 டிசம்பர், 2019

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.தெற்காசிய விளையாட்டில் கலந்து கொண்ட இலங்கை குழாம் முதன்முறையாக பெருமளவு 
பதக்கங்களை 
வெற்றி பெற்ற நிலையில், நேற்று நாடு திரும்பியிருந்தது. தெற்காசிய நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இலங்கை மூன்றாமிடத்தை பெற்றிருந்தது.40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடகங்களாக 251 பதக்கங்களை இலங்கை அணி பெற்றுக் கொண்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சர்வதேச போட்டியொன்றில் இலங்கை பெற்ற அதிகூடிய பதக்கங்கள் இதுவாகும்.
2001ஆம் நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை குழாம் 178 பதக்கங்களை பெற்றமையே அதிகூடியதாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டு புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் அமஷா டி சில்வா, நதீஷா ராமநாயக்க, துலஞ்சலி ரணசிங்க ஆகிய வீராங்கனை அதிகூடிய தங்க பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.இலங்கைக்கு 
பெருமை தேடித்தந்த வீர, வீராங்கனைகளை பாராட்டுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் துமிந்த சில்வா நேபாளம் சென்றிருந்தார். வெற்றிக்குழுவுடன் அமைச்சரும் நாடு திரும்பியிருந்தார். 
ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. நேபாளம் 51 தங்க பதக்கங்களை பெற்ற நிலையில் இரண்டாமிடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 172 தங்க பதக்கங்கள், 93 வெள்ளிப் பதக்கங்கள் 45 வெண்கல பதக்கங்கள் 
அடங்களாக மொத்தமாக 310 பதக்கங்களை பெற்றுள்ளது. 51 தங்க பதக்கங்கள், 59 வெள்ளிப் பதக்கங்கள், 94 வெண்கல பதக்கங்கள் அடங்களாக 204 பதக்கங்களுடன் நேபாளம் பதக்க பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பதக்க பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களில் 
உள்ளமை குறிப்பிடத்தக்கது
READ MORE - தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள். குவியும் வாழ்த்துக்கள்

கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி

எதிர் வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.iOS8 அல்லது 
அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்ட் மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் 
அப்பை பயன்படுத்த முடியாது
இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை 
புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வட்ஸ்அப் செயலி முடங்கி உள்ளதாக 
தகவல் வெளியாகி உள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி

பல்கலைக்கழகத்திற்கு செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளி முறையில் புதிய நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அந்தவகையில் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் வெட்டுப்புள்ளி பயன்படுத்தப்பட உள்ளதாக
 தெரியவருகின்றது.
தற்போது மாகாண, மாவட்ட மற்றும் பாடசாலை ரீதியில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வியினை வழங்குவதில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக 
தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாகவே இந்த புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை 
அனுமதி வழங்கியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - பல்கலைக்கழகத்திற்கு செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

திருக்கார்த்திகை வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்

புதன், 11 டிசம்பர், 2019

இன்று திருக்கார்த்திகை தினம். அன்று கோவில் மட்டும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவோம். வீடுகளில் ஏற்றும்போது எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், எந்தெந்த இடத்தில் ஏற்ற வேண்டும்
 என்பது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.திருக்கார்த்திகை 
நாளைத் தான் நாம் கார்த்திகை தீபமாகக் காலங்காலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.இந்த திருக்கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை. அந்த நாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும் கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, மிக வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.
வீட்டில் ஏற்றப்படும் 27 தீபங்களில் முதல் 4 தீபங்களை மட்டும் வீட்டினுடைய முற்றப் பகுதிகளில் ஏற்றினால் போதும். இப்போதெல்லாம் எந்த வீடுகளிலும் குறிப்பாக நகரங்களில் உள்ள அடுக்கு மாடி வீடுகளில் முற்றம் என்பதே கிடையாது. அதனால் ஹாலில் நான்கு 
விளக்குகளை ஏற்றுங்கள்.
சமையலறை:சமையல் அறையில் ஈசானி மூலையில் ஒரே ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வையுங்கள்.வீட்டில் முற்றத்துக்கும் வீட்டின் மற்ற அறைகளுக்கும் இடையே இருக்கிற நடைப்பகுதியில், இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும்.
வீட்டுக்குள்ளும் வீட்டின் முன் புறத்திலும் விளக்கேற்றும் நாம் வீட்டின் பின்புறத்தைக் கண்டு கொள்ளவே மாட்டோம். ஆனால் திருக்கார்த்திகையில் கட்டாயம் வீட்டின் பின்கட்டுப் பகுதியில் 
விளக்குகள் ஏற்ற வேண்டும். அதிலும் 4 விளக்குகள் ஏற்ற வேண்டும்.வீடுகளில் சிறியதாக குழி போன்று வாசலுக்கு இரண்டு புறமும் மாடங்கள் அமைத்திருப்பார்கள். அப்படி மாடங்கள் இருந்தால் இதில் இரண்டு விளக்குகள் ஏற்றி வையுங்கள். இல்லையென்றால் அப்படியே அந்த வாசல் பகுதிக்கு நேராக இரண்டு புறங்களிலும் இரண்டு விளக்குகளை 
ஏற்றுங்கள்.
நிலைப்படி:வீட்டின் பிரதான கதவு உள்ள பகுதி தான் இது. அந்த வாயிலின் நிலைப்படியில் இரண்டு புறமும் விளக்குகள் ஒவ்வொன்றாக வையுங்கள்.கடவுள் படங்கள்கடவுளின் படங்கள் வைத்திருக்கும் இடங்களில் இரண்டு புறமும் இரண்டு விளக்குகளை
 ஏற்றி வையுங்கள்.
வீட்டுக்கு வெளியே:வீட்டுக்கு வெளிப்புறத்தில் தீபாவளி அன்று ஏற்றுவது போல் இன்றும் ஒரேயொரு எமதீபம்
 ஏற்றி வையுங்கள்.
கோலத்தில்:திருக்கார்த்திகை அன்று கட்டாயம் வீட்டின் முன் மாக்கோலம் போடுவது வழக்கம். அந்த கோலத்தில் 5 விளக்குகள் ஏற்றுங்கள்.கிராமங்களில் திண்ணை இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. அந்த திண்ணைப் பகுதியில் 4 தீபங்கள் ஏற்றி 
வைக்க வேண்டும்.
ஏன் 27 ? இப்படி மொத்தம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. அது என்ன 27 என்று நீங்கள் கேட்கலாம். 27 என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்.

READ MORE - திருக்கார்த்திகை வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்

பரீட்சைகள் திணைக்கத்தின் முக்கிய எச்சரிக்கை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு

செவ்வாய், 10 டிசம்பர், 2019

க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, தகாத முறையில் நடந்து கொள்ளல் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு
 இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறித்த
 நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் பரீட்சை முடிவுகளும் இரத்துச் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் 12ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் நிறைவடையவுள்ள நிலையில், பரீட்சை 
நிலைய கண்காணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதேபோல, நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாிகளுக்கு இந்த விடயம் குறித்து அறிவிக்கபட்துள்ளது .எனவே, பரீட்சை நிலையங்கள் அனைத்திலும் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

READ MORE - பரீட்சைகள் திணைக்கத்தின் முக்கிய எச்சரிக்கை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு

மாணவர்களின் சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

வெள்ளி, 6 டிசம்பர், 2019

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் வழங்கும் செயன்முறையை தொடர்ந்தும் செயற்படுத்தும் கல்வி அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி 2020 ஆம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கான 
வவுச்சர்களை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இன்று (வியாழக்கிழமை) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.2020 ஆம் ஆண்டில் புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் தொடக்கத்தில் அனைத்து 
மாணவர்களுக்கும் பாடசாலை 
சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும முன்னர்குறிப்பிட்டிருந்தார்.சீருடைக்கு பதிலாக வவுச்சர்களை வழங்க கடந்த அரசாங்கம் மேற்கொண்ட 
நடவடிக்கை காரணமாக அரசாங்கத்திடம் அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மாணவர்களின் சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வருடம் 50 ஆயிரம் அரசசேவையில்

சனி, 30 நவம்பர், 2019

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக அடுத்த 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளார்.அத்துடன் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.நேற்றையதினம் ஹோமாகம ஆட்டிக்கல கனிஷ்ட வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட இரு மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில். அமைச்சர் உரையாற்றியபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


READ MORE - ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வருடம் 50 ஆயிரம் அரசசேவையில்

பொலிஸாரிடம் யாழ்-மன்னார் வீதியில் மாட்டிய 200 கிலோ கேரளக் கஞ்சா

சனி, 23 நவம்பர், 2019

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதி, மாந்தை சந்தியில் வைத்து கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு.22.11.19. நேற்று இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் 
விரைந்து செயற்பட்ட போதைப்பொருள் 
தடுப்பு பிரிவினர் கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.வாகனத்தில் மீன் ஏற்றிச் செல்லும் விதத்தில் றெஜிபோம் பெட்டிகளில் மறைத்து 
வைத்துக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலே, 200 கிலோ 165 கிராம் எடை கொண்ட குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியுடையவை எனத் தெரியவருகின்றது. இதன்போது நானாட்டான் மற்றும் பேசாலையைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது
 செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் வாகனம் மன்னார் மாவட்ட சிரேஸ்ட 
பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு 
உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பொலிஸாரிடம் யாழ்-மன்னார் வீதியில் மாட்டிய 200 கிலோ கேரளக் கஞ்சா

வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து…பிரபலமான இரு கடைகள் எரிந்து நாசம்

புதன், 13 நவம்பர், 2019

வெள்ளவத்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரபல ஆடை விற்பனை நிறுவமான நோலிமிட்டிற்கு அருகாமையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.றோயல் பேக்கரி உட்பட இரு கடைகள் எரிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.தீப் பரவலுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து…பிரபலமான இரு கடைகள் எரிந்து நாசம்

பலாலியில் லிருந்து சென்னைக்கு வெள்ளி முதல் .Fits Air விமானசேவை ஆரம்பம்

வியாழன், 7 நவம்பர், 2019

யாழ்பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (08.11.2019.வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக
 மேற்கொள்கின்றது.
இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை Fits Air விமானம் ஆரம்பித்தது .
இது யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இடம்பெறும் முதலாவது விமான சேவையாக பதிவாகியுள்ளது. மீண்டும் இந்த விமானம் பி.ப.2.20 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு இரத்மலானையைச்
 சென்றடையும்.
இதேவேளை சென்னையில் இருந்து யாழ் பலாலிக்கும் இடையிலான எலையன்ஸ் (Alliance Air) விமானசேவைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
அதன்பின்னர் கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பலாலியில் லிருந்து சென்னைக்கு வெள்ளி முதல் .Fits Air விமானசேவை ஆரம்பம்

சிறார்களை கட்டணங்கள் எதுவும் இல்லாமல் இலவசமாக ஏற்றிய கௌசிகா எனும் பேரூந்து

வெள்ளி, 1 நவம்பர், 2019

 பாடசாலை முடிந்தவுடன்.01.11.2019. கனகராயன்குளத்திலிருந்து மாங்குளம் வரையில் செல்லும் மாணவர்கள் பேரூந்திற்காக காத்திருந்த வேளையில், வவுனியாவிலிருந்து யாழ்நோக்கி வந்த கௌசிகா எனும் பெயர் கொண்ட பேரூந்து.. கிட்டத்தட்ட 50ற்கும் மேற்பட்ட 
மாணவர்களை ஏற்றியது மட்டுமல்லாமல், எந்த மாணவரிடத்திலும் கட்டணம் அறவிடவில்லை.மழையில் சிக்காமலும் நேரகாலத்துடனும் மகிழ்ச்சியாக வீடு சென்றனர் மாணவர்கள்.குறுந்தூரம் என்று மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் தவிர்க்கின்ற பேருந்து
 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இவர்களின் முன்னுதாரணமான செயல்
நிச்சயம் ஒரு பாடம் புகட்டும்.இந்த பேரூந்து உரிமையாளர் மற்றும் பேரூந்தை செலுத்திய சாரதி மற்றும் நடத்துனருக்கும்
 வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன், இது போன்ற சமூகத்திற்கு முன்னுதாரணமான சேவைகளை 
தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்பதையும் தெரிவித்துக்
 கொள்கிறோம்.

READ MORE - சிறார்களை கட்டணங்கள் எதுவும் இல்லாமல் இலவசமாக ஏற்றிய கௌசிகா எனும் பேரூந்து

யாழ் வல்லைப் பாலத்தில் தடம்புரண்ட கார்..மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

திங்கள், 28 அக்டோபர், 2019

யாழ் வல்லைப் பாலத்தில் .28,10.2019. அதிகாலை 
 கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது .சம்பவத்தில் தெய்வாதீனமாக
 சாரதி பாய்ந்து உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
 இது மழைக்காலம் என்பதால் வாகனங்கள் சறுக்கி தடம் புரள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் சாரதிகளே வேகத்தை குறைத்து 
உங்கள் குடும்பம், அம்மா, அப்பா ,மனைவி, பிள்ளைகள் இவர்களின் நிலையை கருத்தில் கொண்டும் உங்கள் உயிரின் பெறுமதியை உணர்ந்தும் செயற்படுங்கள். இது மழைக் காலம். 
அவதானம் தேவை சாரதிகளே தயவு செய்து வாகனங்களின் வேகத்தை குறைத்து செலுத்துங்கள்.. பெறுமதியான உயிரைக் காப்பாற்றிக் 
கொள்ளுங்கள்..!

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் வல்லைப் பாலத்தில் தடம்புரண்ட கார்..மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

கல்விப் போதனையினாலும் அழகினாலும் இலங்கையர்களை கவர்ந்த சகோதர மொழி ஆசிரியை

செவ்வாய், 22 அக்டோபர், 2019

இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் இன்று அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா திகழ்கின்றார்.பேஸ்புக் வலைத்தள பயன்பாட்டாளர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.யார் இந்த ஹிருஷி வர்ஷா?
கம்பஹா பகுதியில் ஆசிரியையாக 
கடமையாற்றும் இவர், ஒரு சிங்கள திரையுல நடிகையாகவும் திகழ்கின்றார்.மாணவர்களை மிகவும் கன்னியமான முறையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதனை பிரதிபலிக்கும் வகையில் பிரபல புகைப்பட கலைஞரும், பேராசிரியருமான தசுன் நிலன்ஜன இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கல்விப் போதனையினாலும் அழகினாலும் இலங்கையர்களை கவர்ந்த சகோதர மொழி ஆசிரியை

பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை
 படைத்துள்ளார்.
 இந்நிலையில் தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியில் இன்று இடம்பெற்றுள்ளது.
சைவபிரகாசா மகளீர் கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், 
மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை பளுதூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் வெற்றியீட்டிய மாணவிக்கு பலரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை

நாட்டில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு
 தெரிவித்துள்ளது.
இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்கள் வெளியிட்டு மக்களை பிழையாக வழிநடத்தல் மற்றும் குழப்பம் ஏற்படுத்துதல் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.
தவறாக நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு ஊடாக இலங்கை பேஸ்புக் அதிகாரிகளிடம் அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - நாட்டில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி


வவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் உழவியந்திரம் பெரியகட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மதகுடன் மோதி குடைசாய்ந்தது.
இதன்போது கணவன் தூக்கிவீசப்பட்டதுடன், மனைவி உழவியந்திரத்தின் கீழ்பகுதியில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை அவசர அம்புலன்ஸ் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சிறு காயங்களுக்கு உள்ளான கணவன் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்த விபத்தில் பெரியகட்டு பகுதியை சேர்ந்த தனுசா (வயது 21) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி

இலங்கையிலிருந்து கடன் அட்டைகள், டெபிட் அட்டை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

இலங்கையிலிருந்து கடன் அட்டை மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் வெளிநாடுகளில் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது வாடிக்கையாளர்களிடம் வரி ஒன்றை 
அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்காக நிதி சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொண்டு அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் பொருட்கள் கொள்வனவு மற்றும் சேவை பெற்றுக்கொள்வதற்காக க்ரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் 
அனைவருக்கும் இந்த வரி அறிவிடப்படவுள்ளது.அதற்கமைய அட்டைகள் ஊடாக இலங்கையில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு நூற்றுக்கு 3.5 வீதம் வரி அறவிடப்படவுள்ளது.
பணத்தை இலங்கையில் இருந்து அனுப்பும் சந்தர்ப்பத்திலேயே வரிப்பணம் அறவீடு செய்யப்படவுள்ளது.வரி தொடர்பான திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

READ MORE - இலங்கையிலிருந்து கடன் அட்டைகள், டெபிட் அட்டை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

யாழ் பலாலி விமான நிலையத் திறப்பு விழாவில் பாடப்படாத தேசியகீதம்

வியாழன், 17 அக்டோபர், 2019

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில், தேசிய கீதம் 
பாடப்படாமல், இசைக் கருவிகளால் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
தேசியக் கீதத்தைப் பாடுவதற்காக, நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டிருந்த போதும், 
அவர்களால் தேசிய கீதம் பாடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் விழா சம்பிர​தாயபூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே தேசியக் கொடி ஏற்றபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

READ MORE - யாழ் பலாலி விமான நிலையத் திறப்பு விழாவில் பாடப்படாத தேசியகீதம்

காணாமல் போன பாடசாலை மாணவி. தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

தெரணியகலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமற்போன தரம் 9இல் கல்விப் பயிலும் கே.கிஸ்ணதேவி என்ற மாணவியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தெரணியகலை உடயங்கந்த தோட்டத்தை சேர்ந்த 14 வயதான குறித்த 
மாணவி கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற வாணிவிழா பூஜை மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்குப்பற்றி வீடு திரும்பும்போதே மாயமாகியுள்ளார்.வாணிவிழா கலை
 நிகழ்ச்சிகள் மாலை 4.30 மணிக்கு நிறைவுற்றதைத் தொடர்ந்து பாடசாலையில் இருந்து பஸ்சில் தனது உறவுமுறை சகோதரியுடன் மாணவி வீட்டுக்கு வரும் வழியில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆடுபாலம் வரை இரண்டு மாணவிகளும்
 சென்றுள்ளனர்.
ஆடுபாலத்தை அண்மித்தவுடன் உடன்சென்ற உறவுமுறை சகோதரி தனது வீட்டுக்கு வந்ததாகவும் காணமல்போன மாணவி ஆடுபாலத்தை கடக்கும்வரை தான் அவரை
 பார்த்துக்கொண்டிருந்ததாகவும், பாலத்தை கடந்த மாணவி உறவுமுறை சகோதரிக்கு தான் சென்று
வருவதாக சமிக்ஞை காட்டியதாகவும், உறவுமுறை சகோதரி வாக்குமூலம் அளித்ததாக தெரணியகலை பொலிசாரின் முதற்கட்ட
 விசாரணையில் தெரியவந்துள்ளது. அன்றையதினம் மாலை 6 மணியாகியும் வீடு திரும்பாத காணாமல் போயுள்ள மாணவியின் தாய் உறவு சகோதரியின் வீட்டுக்கு சென்று விடயங்களை 
ஆராய்ந்துள்ளார். அச்சந்தரப்பத்திலேயே தனது
 மகள் காணாமல் போனதாக மாணவியின் பெற்றோர் தெரணியகலை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.மறுநாள் 9ஆம் திகதி காலை 
பொலிசார் மோப்ப நாய் கொண்டு சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டபோது சிறுமியை கண்டறியமுடியவில்லை.தொடர்ந்து மறுநாள் 10ஆம் திகதி வெள்ளத்தில் ஏதும் அகப்பட்டிருக்கலாமா
 என சந்தேகம் கொண்டு சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அதன்போதும் 
கண்டறியப்படவில்லை.
இன்று நான்கு நாட்கள் கடந்தும் குறித்த சிறுமிக்கு என்ன நடந்தது எனத் தெரியாது பொலிசாரும், பாடசாலை
 ஆசிரியர்களும், ஊர்மக்களும் குடும்பத்தாரும் தொடர்ந்து தேடலில் ஈடுப்பட்டுள்ளனர்.அத்தோடு, சிறுமியை கண்டறிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர். 0773216751,0713998028

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - காணாமல் போன பாடசாலை மாணவி. தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

யாழ் நகரில் பட்டப் பகலில் மாயமான சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்

புதன், 9 அக்டோபர், 2019

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிக்கு சென்று குழந்தையை தவறவிட்டு தாய் பரிதவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும்;யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவர் தனது 4 வயது பெண்குழந்தையுடன் இருசக்கரவாகனத்தில் யாழ்ப்பாணம் நகர்ப்புற கடையொன்றிற்கு சென்றுள்ளார்.அங்கு
 சென்று ஆடையொன்றை வாங்குவதற்கு ஆடைகளை தேர்வு செய்துகொண்டிருந்த நேரத்தில் திடீரென குழந்தையை பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை.உடனடியாக அந்த கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, தாங்களும் குழந்தையை காணவில்லையென 
கூறியுள்ளனர்.
இதனைக்கேட்ட குறித்த பெண் என் குழந்தை எங்கே என உடனே கண்ணீர்விட்டு கதற ஆரம்பித்து விட்டார், பெண்ணின் கதறல் சத்தம் கேட்டதும், அயலிலுள்ளவர்கள் உடனடியாக வந்து, என்ன விடயமென கேட்டு நடந்ததை தெரிந்து கொண்டு குழந்தையை
 தேட ஆரம்பித்தனர்.பலரும் பல திசைகளில் தேடி, சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் சுமார் 50 மீற்றர் தொலைவிலிருக்கும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடையின் முன்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்.
அதற்கு பின்னரே பரிதவிப்பிலிருந்த அந்த 
தாய் நின்மதியடைந்துள்ளார். மேலும், குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது பெற்றோர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டுமெனவும், இதுபோன்ற சம்பவங்கள் பல
 இடம்பெறுகின்றன. இது தொடர்பில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அப்பகுதியில் இருந்த பலர் தெரிவித்திருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் நகரில் பட்டப் பகலில் மாயமான சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்

தனியார் பேரூந்து விபத்து.பாடசாலை மாணவர்கள் உட்பட 28 படுகாயம்

செவ்வாய், 8 அக்டோபர், 2019

ஹட்டனில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் 28 மாணவர்கள் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோய
 வனராஜா பகுதியில் இன்று மாலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது.விபத்தினால் பேருந்தில் பயணித்த 18 மாணவர்கள் உட்பட ஏனைய 10 பேருமாக, 28 பேர் காயமுற்ற 
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - தனியார் பேரூந்து விபத்து.பாடசாலை மாணவர்கள் உட்பட 28 படுகாயம்

யாழ் நல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

நல்லூர் ஆலயத்தில் மின சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸர் தெரிவித்தனர்.
காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில்
 சேர்க்கப்பட்டார்.
அங்கு முதியவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் 
மேலும் தெரிவித்தனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - யாழ் நல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்