ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வு ஆரம்பம் வடக்கிகு பாடசாலைகளில்

வியாழன், 21 மார்ச், 2019

வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வும்,பிரயோகப் பரீட்சையும் நாளை வியாழக்கிழமை(21) முதல் இடம்பெறுமென வடமாகாணக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின் மூன்றாம் வகுப்பு 1(அ) தரப் பிரிவுக்கு விஞ்ஞானத் தகவல் தொழில்நுட்பப் பாடங்களுக்கான பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக மாகாணப் பொதுச்சேவை ஆணைக் குழுவால் கடந்த ஒக்ரோபர் 
மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும், பிரயோகப் பரீட்சையும் நாளையும்(21),நாளை மறுதினமும்(22) மாகாணக் கல்வியமைச்சில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்திகள் 20.03.2019
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக