யாழ். மாணவன் உயர்தர பரீட்சையில் சாதனைப் படைத்துள்ளார்

திங்கள், 31 டிசம்பர், 2018

தனது இரு கண்களை இழந்தபோதும், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று யாழ். மாணவன் சாதனைப் படைத்துள்ளார்.
யாழ். யூனியன் கல்லூரி மாணவன் தவராசா அன்ரூ ஜெக்சன், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் மூன்றாவது இடத்தைப்பெற்று இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.
தனது 15ஆவது வயதில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து நெற்றியில் பட்டதால் இரு கண்களின் பார்வையையும் 
அவர் இழந்துள்ளார்.
சிகிச்சைகள் காரணமகா இரண்டு வருடங்கள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டாலும் அவரது அயராத முயற்சியின் காரணமாக சிறந்த பெறுபேறினைப்பெற்று இன்று அவர் தனது குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் பெறுமை சேர்த்துள்ளார்.
அவர் கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்திலும் சிறந்த பெறுபேறினைப்பெற்று ஜனாதிபதியிடம் இருந்து பரிசில்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
யாழ். சுன்னாகத்தில் அமைந்துள்ள விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகத்தில் தங்கியிருந்து, யாழ். யூனியன் கல்லூரியில் கல்வி பயின்று இவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இவரது தந்தை கடற்தொழிலாளியாகவும், தாய் வீட்டுப்பணிப்பெண்ணாகவும் உள்ளதுடன் நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூன்றாமவராக
 இவர் உள்ளார்.
இது குறித்து ஜெக்சன் குறிப்பிடுகையில்,

எனது ஆசை சட்டத்தரணியாவதே, அதற்கு பாரிய முயற்சியும் பொருளாதார வசதியும் தேவை.
முயற்சி என்னிடம் உள்ளது, போதிய பொருளாதார வசதி என்னிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - யாழ். மாணவன் உயர்தர பரீட்சையில் சாதனைப் படைத்துள்ளார்

யாழ். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கத்தின் சோதனை!

வெள்ளி, 28 டிசம்பர், 2018

யாழ். மாநகர சபை எல்லைக்குள் 672 இடங்கள் டெங்கு பெருகுவதற்கு ஏதுவான சூழலாக இனம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், 25 இடங்களில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்டதால், 17 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று 947 இடங்களில் சோதனை நடவடிக்கைகள் 
முன்னெடுக்கப்பட்டன.
யாழ்.பிரேதச செயலகம், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, சுகாதார திணைக்களம், பொலிஸார் , பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரிகள் , ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த சோதனை நடவடிக்கையில்
 ஈடுபட்டனர்.
அதன் போது 947 இடங்களில் சோதனையிட்டதில், 672 இடங்களில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழல்கள் காணப்பட்டுள்ளன.
அதனையடுத்து அத்தகைய இடங்களை உனடியாக துப்பரவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதேவேளை குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களிலும் முன்னெடுக்கப்படும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>



READ MORE - யாழ். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கத்தின் சோதனை!

அச்சுவேலியில் புத்தக கடையொன்று தீப்பிடித்ததில் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான புத்தகங்களும், பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடமபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய மேலும் வருவதாவது,
இந்தப் புத்தகக் கடையை நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் இன்று அதிகாலை இப் புத்தகக் கடை எரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியடையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள்
 கொண்டுவந்துள்ளனர்.
ஆனாலும் அங்கிருந்த பொருட்களும் அந்தக் கடையும் முற்றுமுழுதாக எரிந்துள்ளது. இதில் பல இலட்சம் ரூபா
 பெறுமதியான பொருட்கள் நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் எவையும் இதுவரையில் கண்டறியப்படவில்லையெனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >

READ MORE - அச்சுவேலியில் புத்தக கடையொன்று தீப்பிடித்ததில் எரிந்து நாசம்

முதல் முறையாக யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் Browns ice போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் 85g Browns ice எனப்படும் அதி சக்தி வாய்ந்த போதைப்பொருளுடன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால்
 கைது செய்யப்பட்டுள்ளர்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக இந்த தைப்பொருள் கைது செய்த சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
பண்டத்தரிப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>


READ MORE - முதல் முறையாக யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பெண்மணியின் தங்கச் சங்கிலி யாழ் வர்த்தக நிலையத்தில் அறுப்பு

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண்மணியின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்த இளைஞர்கள் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்
 சென்றுள்ளனர்.
 யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள நீர்த்தாங்கி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உள்ளே வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் நின்றிருந்த சமயம் வர்த்தக நிலையம் முன்பாக உரிமையாளரின் தாயார் கதிரையில் அமர்த்திருந்தார். 
இதனை அவதானித்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். குறித்த சமயம் இரண்டாம் நபர் மோட்டார் சைக்கிள் தயார் நிலையில் வைத்திருந்தார்.
 இந்த நிலையில் மீள் நிரப்பு அட்டையை கொள்வனவு செய்தவர் வர்த்தக நிலையத்தின் முன்னாள் அமர்ந்திருந்த பெண்மணி அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மிகவேகமாக ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறிய நிலையில் வேகமாகத்
 தப்பிச் சென்றுள்ளனர்.
 வர்த்தக நிலையத்தின் உள்ளே நின்ற உரிமையாளர் அவர்களை தடுக்க முயன்றும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.
  சம்பவமானது நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.



READ MORE - பெண்மணியின் தங்கச் சங்கிலி யாழ் வர்த்தக நிலையத்தில் அறுப்பு

யாழ் உரும்பிராய் பகுதியில் உயரமான கிறிஸ்மஸ் மரம்

செவ்வாய், 25 டிசம்பர், 2018

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள புனிதமிக்கல் ஆலய பங்கு இளைஞர்களின் அயராத முயற்சியினால் 68 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரது 
கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தென்னம் ஈர்க்குகள், சம்பு புற்கள், கயிறு, எஸ்லோன் பைப் மற்றும் 160 வண்ண மின் விளக்குகள் கொண்டு இந்த கிறிஸ்மஸ் மரம் 
அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கிறிஸ்மஸ் மரத்தின் கீழ் யேசுநாதரின் பிறப்புக்களை பிரதிபலிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள், அலங்கார பொருட்கள், சாண்டோபாப்பா, சிறுவர்களை மகிழ்விக்கும் வகையிலான பல்வேறு வினோத வடிவங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் உரும்பிராய் பகுதியில் உயரமான கிறிஸ்மஸ் மரம்

கைதடியில் முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு கெஞ்சிய வயோதிபர்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர், தன்னையும் முதியோர் இல்லத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கைதடி முதியோர் இல்லத்தின் வெளிவாயிலில் நின்று வீறிட்டு அழுது குழறிய நெஞ்சைப் பிசையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அவரது துயரநிலையை கவனத்தில் கொண்ட இல்ல நிர்வாகம், உடனடியாக அவரை இல்லத்தில் சேர்த்துக் கொண்டது.
வட்டுக்கோட்டையை சேர்ந்த சபாபதிப்பிள்ளை இராஜகோபால் (85) என்பவரே இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதியவராவார்.
கடந்த ஏழு வருடமாக கொழும்பில் 
உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தேன் என்றும், தறபோது உறவினர்கள் யாருமின்றி வாழ்வதற்கு சிரமப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் என்றும் கைதடி முதியோர் இல்ல நிர்வாகம் 
தெரிவித்துள்ளது.
உடல்நலம் குன்றிய நிலையில், அடுத்து என்ன செய்வதென தெரியாத நிலையில், முதியோர் இல்லா வாயிலுக்கு வந்து தன்னை இணைத்துக்கொள்ளும்படி கோரியிருக்கிறார். முதியோர் இல்லத்தில் இணைப்பதற்கான நிர்வாக நடைமுறையை 
குறிப்பிட்டபோது, தனது உடல்நிலையை குறிப்பிட்டு வீறிட்டு அழுதுள்ளார். இதையடுத்து அவரை இல்லத்தில் இணைத்துக்கொள்ள நிர்வாகம் உடனடி நடவடிக்கையெடுத்தது.
அவர் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள வசதியாக அவரது உறவினர்கள் இல்லத்துடன் தொடர்புகொள்ளுமாறு இல்லத்தின் அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கைதடியில் முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு கெஞ்சிய வயோதிபர்

மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி நாவற்குழியில் கொள்ளை

நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் சங்கிலி , தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரின் வீட்டு கூரையை பிரித்து நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று மூதாட்டியை தாக்கி
 , அவரின் முகத்தை துணியால் கட்டி அவரை அங்கிருந்த கதிரை ஒன்றில் கட்டி வைத்து விட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி , தோடு என்பவற்றை அபகரித்ததுடன் , வீட்டினுள் தேடுதல் நடத்தில் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 3 கையடக்க தொலைபேசி  என்பவற்றையும் கொள்ளையிட்டு தப்பி சென்று உள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னர் மூதாட்டியின் அவல குரல் கேட்டு அயலவர்கள் சென்று மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சண்முகநாதன் நித்தியலட்சுமி (வயது 
70) என்பவரே காயமடைந்தார். அதேவேளை தனக்கு 17 வயதிருக்கும் போது தந்தை தோடுகளை வாங்கி தந்ததாகவும் , தாய் சங்கிலியை வாங்கி தந்ததாகவும் , அவற்றையே இதுவரை காலம் அணிந்து இருந்த போது அவற்றை கொள்ளையர்கள் அபகரித்து சென்று விட்டனர் என கண்ணீர் மல்க சாவகச்சேரி பொலிஸரிடம் முறையிட்டு உள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசரணைகளை 
முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி நாவற்குழியில் கொள்ளை

புகையிரதத்துடன் லான்ட்மாஸ்ரர் யாழில் விபத்து

புதன், 19 டிசம்பர், 2018

கொழும்பில் இருந்து காங்கேசன் துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத்துடன் யாழில் லான்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு 
அருகில் உள்ள புகையிரத கடவையை கடக்க
 முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது.அதன் போது லான்ட்மாஸ்ரர் சாரதி மயிரிழையில்
 உயிர் தப்பியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - புகையிரதத்துடன் லான்ட்மாஸ்ரர் யாழில் விபத்து

உடுவிலிலில் மூதாட்டி குருதி வெள்ளத்தில்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது.
இந்த நிலையில் . படுகாயமடைந்து குருதி வெள்ளத்திலிருந்த மூதாட்டியை  மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.
 இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் உடுவிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்யுலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.
 பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
வீட்டிலே  வளர்ப்பு நாய் நின்றுள்ளது. அது குரைத்த சத்தம் கேட்கவில்லை. இரண்டு கைகளும் கொடூரமாக அடித்து 
உடைக்கப்பட்டுள்ளன.
 தலைப்பகுதி,மற்றும் முகம் முழுவதும் அடிகாயங்கள் காணப்படுகின்றன. கொள்ளையிடும் நோக்கத்தோடு இச்சம்பவம் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளின் கணவர் ( தாதிய உத்தியோகத்தர் - தெல்லிப்பளை வைத்தியசாலை) 
தெரிவித்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - உடுவிலிலில் மூதாட்டி குருதி வெள்ளத்தில்

கொடிகாமத்தில் ரயிலுடன் மோதி நொருங்கிய வாகனம்

யாழில் சற்று முன் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட Mahendira ரக வாகனத்தை யாழ் தேவி புகையிரதம் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

Mahendira வாகனத்தின் பின்பகுதியில் மோதி அதனை வீதிக்கு வெளியே தள்ளியுள்ளது புகையிரதம். இதனால் மயிரிழையில் 
உயிர் தப்பியுள்ளார் சாரதி.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - கொடிகாமத்தில் ரயிலுடன் மோதி நொருங்கிய வாகனம்

எச்.ஐ.வி விழிப்புனர்வு யாழ் மாவட்டத்தில்

சனி, 1 டிசம்பர், 2018

சர்வதேச எச்.ஐ.வி தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் செயற்றிட்டம் ஒன்று யாழ் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ் சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த எச்.ஐ.வி விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம் யாழ் நகரை மையப்படுத்தி இடம்பெற்றது.
யாழ் கடற்கரை வீதியில் அமைந்துள்ள
 சிறைச்சாலை
 வளாகத்திலிருந்து ஆரம்பமான எச்.ஐ.வி விழிப்புனர்வு நடைபவனி பண்ணை வீதி, வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ் பிரதான தபால் அலுவலகத்தில் நிறைவடைந்து அங்கு விழிப்புனர்வு செயற்பாடுகள் 
இடம்பெற்றன.
எச்.ஐ.வி குறித்து பொது மக்களை அறிவுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு யாழ் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் தலைமையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் என பலர் இதில் 
கலந்துகொண்டனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - எச்.ஐ.வி விழிப்புனர்வு யாழ் மாவட்டத்தில்

நாட்டில் சா/ தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

எதிர்வரும் திங்கட்கிழமை(03) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை  எதிர்வரும் 12 ஆம் திகதி 
நிறைவடையவுள்ளது. 
இந் நிலையில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடவடிக்கைகளுக்காக 47 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 4,561 பரீட்சை நிலையங்களும், 541 பரீட்சை இணைப்பு நிலையங்களும் நாடு தழுவிய ரீதியில் 
அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இரத்மலானை விசேட தேவையுடையோர் வித்தியாலயம் மற்றும் தங்கல்ல மாத்தறை சிலாபம் கொழும்பு மகசீன் சிறைச்சாலை போன்றவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் 
அமைக்கப்பட்டுள்ளன. 
போராதனை போதனா வைத்திசாலை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றவற்றிலும் பரீட்சை நடைபெறவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>



READ MORE - நாட்டில் சா/ தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

அடையாள அட்டை இல்லாமல் சென்றோருக்குயாழில் நேர்ந்த கதி

சனி, 24 நவம்பர், 2018

அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக பொலிஸார் கைது செய்து செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்று தலை கீழாக கட்டி த்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.
 பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கையில் ,
கடந்த 19ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது மைத்துனரும் முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று 
கொண்டிருந்த போது , வீட்டுக்கு அருகாமையில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த சுன்னாகம் பொலிஸார் நாம் பயணித்த முச்சக்கர வண்டியை மறித்து சோதனை யிட்டதுடன் , முச்சக்கர வண்டியை ஒட்டி சென்ற எனது மைத்துனரிடம் ஆவணங்களை வாங்கி அவற்றையும்
 பரிசோதித்தனர்.
பின்னர் பின்னால் இருந்த என்னிடம் அடையாள அட்டையை கேட்டனர். அப்போது என்னிடம் அடையாள அட்டை இல்லை. வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன் எனவும், வீட்டில் இருந்து எடுத்து வந்து காண்பிக்கின்றேன் என கேட்டதற்கு , அதனை ஏற்காத பொலிஸார் எம்மை முச்சக்கர வண்டியுடன் சுன்னாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று , மைத்துனை பொலிஸ்யினரின் சமையல் அறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்ததுடன் , என்னை தலைகீழாக கட்டி அடித்து சித்திரவதை செய்தனர்.
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தனியா என கேட்டே என்னை தாக்கினார்கள். பின்னர் மறுநாள் 20ஆம் திகதி மாலை எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லாது எம்மை விடுவித்தனர். பலத்த சித்திரவதைகள் , அடிகாயங்களுக்கு உள்ளான நாம் வலி தாங்க முடியாது 20ஆம் திகதியே தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு சென்று 
சிகிச்சை பெற்றோம்.
எம்மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பில் யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். என தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் 
எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்த பின்னர் குறித்த இளைஞனின் உடலை குளத்தில் வீசினார்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட அப்போதைய
 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஆறு பேருக்கும் சித்திரவதை குற்றச்சாட்டுக்கு பத்தாண்டு சிறை தண்டனை யாழ்.மேல் நீதிமன்றினால் 2017.05.04ஆம் திகதி விதிக்கபட்டு உள்ளதுடன் , கொலை குற்றசாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - அடையாள அட்டை இல்லாமல் சென்றோருக்குயாழில் நேர்ந்த கதி

இராணுவ வாகனம் ஏ9 வீதியில் மின் கம்பத்துடன் மோதியது

வியாழன், 22 நவம்பர், 2018

கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது.
இன்று மாலை நான்கு 45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால் மின்சார சபை உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு அனர்தத்தை
 தவிர்த்துள்ளனர்.
பரந்தன் பகுதியில் இருந்து இரணைடுமடு நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தின் கனரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதனால் குநித்த விபத்து எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - இராணுவ வாகனம் ஏ9 வீதியில் மின் கம்பத்துடன் மோதியது

போதை தலைக் கேறிய தந்தை மகனுக்கு யாழில் செய்த செயல்

யாழ்ப்பாணத்தில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான மகன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
கடி காயங்களுக்கு இலக்கான ஐந்து வயதுச் சிறுவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதை தலைக் கேறிய தந்தையே சிறுவனைக் கடித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவன் கை, முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்களுக்கு இலக்காகியுள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசரணைகளி்ன் பின்னர் இன்று அவர் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் 
தெரிவித்தனர்.
இதேவேளை சிறுவனின் உடல்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது என்றும், தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - போதை தலைக் கேறிய தந்தை மகனுக்கு யாழில் செய்த செயல்

தங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்

இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அது கொஞ்ச நஞ்சம் மனித உயிர்களுக்கிடையே நடமாடி கொண்டிருக்கும் அன்பு என்ற ஒன்றினால்தான்!!
கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு சம்பவம்தான் இதனை நிரூபித்துள்ளது. அது தற்போது வீடியோவாகவும் வைரலாகியும் வருகிறது. குட்டிப் பெண் குழந்தை பாஸ்கட் போல் விளையாடுகிறாள். இதை அந்த குழந்தையின் அண்ணன் பார்த்து கொண்டே 
இருக்கிறான்.
அதற்காக அந்த பாஸ்கட் போல் கூடை பக்கத்திலேயே போய் நின்று கொள்கிறாள். ஆனால் அந்த கூடையோ மிகவும் உயரமாக இருக்கிறது. எட்டிக் கூட அந்த பந்தை போட முடியாத அளவுக்கு உயரம். அதனால், திரும்பத் திரும்ப பாலை அந்த கூடைக்குள் போட முயற்சி செய்கிறாள். முடியவே இல்லை. தோற்று தோற்றுப் போகிறாள். கடைசியில் அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. பீறிட்டு வெடித்து அழ 
ஆரம்பித்துவிடுகிறாள்.
இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவள் அண்ணனோ பதறி ஓடிவருகிறான் தங்கையிடம். அழும் தங்கையை தன் பிஞ்சு கைகளால் சமாதானப்படுத்துகிறான் சிறுவன். குட்டித் தங்கையின் கண்ணீரை துடைத்து விடுகிறான். தன்னோடு அப்படியே அவளை கட்டிப்பிடித்து கொண்டு தேற்றுகிறான் சிறுவன். அப்போது 'நீ மிகவும் வலிமையானவள்.. அழாதே' என்று சொல்கிறான்.
அழுகையின் ஈரம் காயாத தங்கையின் கன்னத்தில் முத்தம் தருகிறான். பிறகு பாஸ்கட் பந்தை கைகளில் எடுத்து தந்து... அவளை தூக்கிக்கொண்டு கூடைக்கு நெருக்கமாக அண்ணன் செல்ல... பந்தை சரியாக இந்த முறை தங்கை கூடையில் போட... வெடித்து சிரிக்கிறாள் தங்கை. அழுத தங்கை இப்போது சிரிப்பதை பார்த்து தானும்
 சிரிக்கிறான் அண்ணன்.
பறந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகில் இந்த காட்சியை ரசிப்பவர்கள் எத்தனை பேரோ தெரியாது. ஆனால், இந்த பாசப் பிணைப்பு வைரலாகி இணையத்தை கெட்டியாக பிடித்துக்
 கொண்டுள்ளது.
இதை இந்த குழந்தைகளின் தாயே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன் இரண்டு குழந்தைகளும் பொசிட்டிவாகவும், உறவு, மற்றும் உணர்வுகளின் மகத்துவம் புரிந்தவர்களாகவும் இருப்பதை எண்ணிதான் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - தங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்

திடீரென இலங்கையில் செயலிழந்த பேஸ்புக் சிரமத்தில் பயனாளர்கள்

புதன், 21 நவம்பர், 2018

பேஸ்புக் வலைத்தளம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில், எந்த விதத்திலும் பேஸ்புக் தடை மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மொழிபெயர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.அந்த அமைப்பின்
 தலைவர் ரஜிவ் யசிரு குருவிட்டகே மெத்திவ் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் நேற்றைய தினம் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது.இந்த முடக்கம் காரணமாக மில்லியன் கணக்கிலான சமூக வலைத்தள பயனாளர்கள் தங்கள் பேஸ்புக்
 மற்றும் இன்ஸ்ட்ராகிராம் கணக்குகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளில் வாழும் பேஸ்புக் பயனாளர்களே இந்த நிலைமைக்கு அதிகமாக முகம் கொடுத்துள்ளனர்.சில மணி நேரங்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் ஆகிய வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பிய போதிலும், சில பயனாளர்களுக்கு குறைந்த வேகத்தில் இயங்குவதாக 
குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு பேஸ்புக் செயலிழந்தமையினால், தங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களினால் பேஸ்புக் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என இலங்கை பயனாளர்கள் சந்தேகம் 
வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையில் திட்டமிட்டு பேஸ்புக் முடக்கம் செய்யப்பட்டதாக போலிப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை இலங்கையர்கள் எவரும் நம்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பேஸ்புக் வேகமாக இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - திடீரென இலங்கையில் செயலிழந்த பேஸ்புக் சிரமத்தில் பயனாளர்கள்

யாழில் டெங்கு நோய்தாக்கத்தினால் 271 பேர் பாதிப்பு

செவ்வாய், 20 நவம்பர், 2018

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் 
தெரிவித்துள்ளன.
மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய சாதகமான நிலை ஏற்ப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலப்பகுயில் 271 பேர் டெங்கு நோய்த் 
தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 போர் வரையில் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுவதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை 
விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் டெங்கு நோய்த் தடுப்பு செயற்றிட்டம் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழில் டெங்கு நோய்தாக்கத்தினால் 271 பேர் பாதிப்பு

இளைஞன்யாழில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் மீட்பு

யாழ் அல்லைப்பிட்டியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மீட்ட இந்த பரபரப்பு சம்பவம் நேற்று 
முன்தினம் (18.11.2018) இடம்பெற்றது.
அல்லைப்பிட்டி வாடிவீட்டுக்கு அண்மையில் வீதியோரமாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவ் வீதியால் வந்த முச்சக்கரவண்டி சாரதியொருவர் அவதானித்து பின் வேறு சிலரும் கூடி, அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அறிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நோயாளர் காவு வண்டி, இளைஞனை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக
 கூறப்படுகிறது.
இளைஞன் கழுத்தறுக்கப்பட்டிருந்த இடத்தில் அவரது துவிச்சக்கர வண்டி, செருப்பு என்பன வேறுவேறு திசைகளில் காணப்பட்டன.சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை 
மேற்கொண்டுள்ளனர்.
இது கொலை முயற்சியா அல்லது தற்கொலை முயற்சியா என்பதை இன்னும் உறுதிசெய்யவில்லையென பொலீஸ் தரப்பு 
செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இளைஞன்யாழில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் மீட்பு

கந்தர்மடத்தில் ரயிலில் மோதி சுக்கு நூறாகிய கார்

யாழ்- காங்கேசன்துறையிலிருந்து கொழும்புநோக்கிப் பயணித்த ரயிலில் காரொன்று மோதுண்டதனால் ஒருவர் 
படுகாயமடைந்துள்ளார்.
கந்தர்மடம் இந்துமகளிர் வீதியில் பாதுகாப்பற்ற ரயில்கடவையில் இன்று நண்பகல் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இதன்போது படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற ரயில்கடவையை கடக்கமுற்பட்டபோதே எதிரேவந்த ரயில், காரைமோதி கந்தர்மடம் அரசடிவீதிவரை இழுத்துச்சென்றுள்ளது.
இந்தநிலையில் குறித்தவிபத்தில் காயமடைந்த வர்த்தகர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கந்தர்மடத்தில் ரயிலில் மோதி சுக்கு நூறாகிய கார்

கஜா புயலால் யாழில் 700ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

ஞாயிறு, 18 நவம்பர், 2018

கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க 
அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த கஜா புயல் நேற்று முன்தினம் மாலை 6.10 மணிமுதல் நேற்று அதிகாலை வரை கடுமையாக
 வீசியதில் யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 52 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 500 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. சிறுதொழில் முயற்சியாளர்களின் கடைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் 20 சேதமடைந்துள்ளன.
நேற்றுமுன்தினம் மாலை 6 மணிமுதல் நேற்று காலை 10 மணியளவில் வரை புயலின் தாக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் காற்றின் வேகம் குறைவடைந்து சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் .யாழ். மாவட்ட செயலகத்தினால் அவசர புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் சுமார் 700 குடும்பங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக 
இனங்காணப்பட்டுள்ளன.
விரிவான புள்ளிவிபரத்தினைப் பெற்றுக்கொள்ள முடியுமாயின், சுமார் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - கஜா புயலால் யாழில் 700ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

பாரிய இயற்கை சீற்றம் வட- கிழக்கில் ஏற்ப்படபோகிறது

சனி, 10 நவம்பர், 2018

எதிர்பார்த்தது போன்று சூறாவளி ஜாஜா சென்னை நகரை நோக்கி நகரவர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது .
அடுத்த 24-36 மணி நேரத்தினுல் அந்தமான் தீவுகளிற்கு மேற்காக சூறாவளி உருவாகும் வாய்ப்பு உள்ளது அது 13 ஆம் திகதி ஆகும் போது மத்திய வங்காள விரிகுடாவில் அல்லது சற்று கீழாக
 category 2 சூறாவளியாக மாறும்.தற்போதுள்ள சூழலியல் நிபந்தனைகள் மாறாத விடத்து நவம்பர் 16 ஆம் திகதி category 3 சூறாவளியாக மாறி 180Km/h - 200km/h வேகத்தில் சென்னை நகரைத் தாக்கும். இந்த சூறாவளியின் கண் (Eye) இந்தியாவில் காணப்பட்டாலும் அதன் கண் சுவர் (Eye wall) ,யாழ்ப்பாண நகர் வரை காணப்படலாம்.
இதன் மழை வலயம் ( Rain band) இலங்கையின் மேற்கு வரை 
காணப்படலாம்.
வடகிழக்கு மாகாணங்களில் பயங்கர (Extremly heavy rain)பொழியும் .பயங்கரமான வெள்ள நிலமைகள் கூட ஏற்படலாம் .அத்துடன் யாழ்,கிளிநொச்சி, வட திருகோணமலை பகுதிகளில்
 கடல் அலைகள் 10-12 அடி வரை உயரலாம் ,யாழ் குடா நாட்டின் சில பகுதிகளில் கடல் நீர் நிலப் பகுதியில் உட்செல்ல வாய்ப்பு உள்ளது .
மேல் நிலமைகளை கருத்திற் கொண்டு வட- கிழக்கு மக்கள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
01வானிலை அவதான நிலைய எச்சரிக்கை வந்தவுடன் முழுத் தீவுப் பகுதி மக்களும் வெளியேர (Evacuation) தயாராக
 இருக்க வேண்டும்.
02.யாழ் குடாநாட்டில் கடலில் இருந்து 300m தூரத்தில் வாழும் மக்களும் வெளியேர தயாராக இருக்க வேண்டும்.
03.கிழக்கு ,வட மத்திய ,வட மேல் மாகாண மக்கள் பாரிய வெள்ள அனர்த்த்தை எதிர் கொள்ள தயாராக வேண்டும்.
04.அரச நிருவாக அலகுகள் பூரண ஆயத்துடன் இருக்க வேண்டும்.
05. சகல மீனவர்களும் உடன் கரைக்கு
 திரும்ப வேண்டும்.


READ MORE - பாரிய இயற்கை சீற்றம் வட- கிழக்கில் ஏற்ப்படபோகிறது

இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒருதொகை சிகரட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர்  (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேநபர்களிடமிருந்து 41,000 சிகரட்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.இவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
மாரவில மற்றும் கொழும்பை சேர்ந்த 35 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் தமது 205 பயணப்பொதியில் மிக சூட்சுமமாக மறைத்து வைத்து, துபாயிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது