யாழ். மாணவன் உயர்தர பரீட்சையில் சாதனைப் படைத்துள்ளார்

திங்கள், 31 டிசம்பர், 2018

தனது இரு கண்களை இழந்தபோதும், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று யாழ். மாணவன் சாதனைப் படைத்துள்ளார்.
யாழ். யூனியன் கல்லூரி மாணவன் தவராசா அன்ரூ ஜெக்சன், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் மூன்றாவது இடத்தைப்பெற்று இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.
தனது 15ஆவது வயதில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து நெற்றியில் பட்டதால் இரு கண்களின் பார்வையையும் 
அவர் இழந்துள்ளார்.
சிகிச்சைகள் காரணமகா இரண்டு வருடங்கள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டாலும் அவரது அயராத முயற்சியின் காரணமாக சிறந்த பெறுபேறினைப்பெற்று இன்று அவர் தனது குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் பெறுமை சேர்த்துள்ளார்.
அவர் கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்திலும் சிறந்த பெறுபேறினைப்பெற்று ஜனாதிபதியிடம் இருந்து பரிசில்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
யாழ். சுன்னாகத்தில் அமைந்துள்ள விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகத்தில் தங்கியிருந்து, யாழ். யூனியன் கல்லூரியில் கல்வி பயின்று இவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இவரது தந்தை கடற்தொழிலாளியாகவும், தாய் வீட்டுப்பணிப்பெண்ணாகவும் உள்ளதுடன் நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூன்றாமவராக
 இவர் உள்ளார்.
இது குறித்து ஜெக்சன் குறிப்பிடுகையில்,

எனது ஆசை சட்டத்தரணியாவதே, அதற்கு பாரிய முயற்சியும் பொருளாதார வசதியும் தேவை.
முயற்சி என்னிடம் உள்ளது, போதிய பொருளாதார வசதி என்னிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - யாழ். மாணவன் உயர்தர பரீட்சையில் சாதனைப் படைத்துள்ளார்

யாழ். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கத்தின் சோதனை!

வெள்ளி, 28 டிசம்பர், 2018

யாழ். மாநகர சபை எல்லைக்குள் 672 இடங்கள் டெங்கு பெருகுவதற்கு ஏதுவான சூழலாக இனம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், 25 இடங்களில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்டதால், 17 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று 947 இடங்களில் சோதனை நடவடிக்கைகள் 
முன்னெடுக்கப்பட்டன.
யாழ்.பிரேதச செயலகம், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, சுகாதார திணைக்களம், பொலிஸார் , பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரிகள் , ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த சோதனை நடவடிக்கையில்
 ஈடுபட்டனர்.
அதன் போது 947 இடங்களில் சோதனையிட்டதில், 672 இடங்களில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழல்கள் காணப்பட்டுள்ளன.
அதனையடுத்து அத்தகைய இடங்களை உனடியாக துப்பரவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதேவேளை குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களிலும் முன்னெடுக்கப்படும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>



READ MORE - யாழ். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கத்தின் சோதனை!

அச்சுவேலியில் புத்தக கடையொன்று தீப்பிடித்ததில் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான புத்தகங்களும், பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடமபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய மேலும் வருவதாவது,
இந்தப் புத்தகக் கடையை நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் இன்று அதிகாலை இப் புத்தகக் கடை எரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியடையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள்
 கொண்டுவந்துள்ளனர்.
ஆனாலும் அங்கிருந்த பொருட்களும் அந்தக் கடையும் முற்றுமுழுதாக எரிந்துள்ளது. இதில் பல இலட்சம் ரூபா
 பெறுமதியான பொருட்கள் நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் எவையும் இதுவரையில் கண்டறியப்படவில்லையெனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >

READ MORE - அச்சுவேலியில் புத்தக கடையொன்று தீப்பிடித்ததில் எரிந்து நாசம்

முதல் முறையாக யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் Browns ice போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் 85g Browns ice எனப்படும் அதி சக்தி வாய்ந்த போதைப்பொருளுடன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால்
 கைது செய்யப்பட்டுள்ளர்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக இந்த தைப்பொருள் கைது செய்த சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
பண்டத்தரிப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>


READ MORE - முதல் முறையாக யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பெண்மணியின் தங்கச் சங்கிலி யாழ் வர்த்தக நிலையத்தில் அறுப்பு

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண்மணியின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்த இளைஞர்கள் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்
 சென்றுள்ளனர்.
 யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள நீர்த்தாங்கி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உள்ளே வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் நின்றிருந்த சமயம் வர்த்தக நிலையம் முன்பாக உரிமையாளரின் தாயார் கதிரையில் அமர்த்திருந்தார். 
இதனை அவதானித்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். குறித்த சமயம் இரண்டாம் நபர் மோட்டார் சைக்கிள் தயார் நிலையில் வைத்திருந்தார்.
 இந்த நிலையில் மீள் நிரப்பு அட்டையை கொள்வனவு செய்தவர் வர்த்தக நிலையத்தின் முன்னாள் அமர்ந்திருந்த பெண்மணி அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மிகவேகமாக ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறிய நிலையில் வேகமாகத்
 தப்பிச் சென்றுள்ளனர்.
 வர்த்தக நிலையத்தின் உள்ளே நின்ற உரிமையாளர் அவர்களை தடுக்க முயன்றும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.
  சம்பவமானது நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.



READ MORE - பெண்மணியின் தங்கச் சங்கிலி யாழ் வர்த்தக நிலையத்தில் அறுப்பு

யாழ் உரும்பிராய் பகுதியில் உயரமான கிறிஸ்மஸ் மரம்

செவ்வாய், 25 டிசம்பர், 2018

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள புனிதமிக்கல் ஆலய பங்கு இளைஞர்களின் அயராத முயற்சியினால் 68 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரது 
கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தென்னம் ஈர்க்குகள், சம்பு புற்கள், கயிறு, எஸ்லோன் பைப் மற்றும் 160 வண்ண மின் விளக்குகள் கொண்டு இந்த கிறிஸ்மஸ் மரம் 
அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கிறிஸ்மஸ் மரத்தின் கீழ் யேசுநாதரின் பிறப்புக்களை பிரதிபலிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள், அலங்கார பொருட்கள், சாண்டோபாப்பா, சிறுவர்களை மகிழ்விக்கும் வகையிலான பல்வேறு வினோத வடிவங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் உரும்பிராய் பகுதியில் உயரமான கிறிஸ்மஸ் மரம்

கைதடியில் முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு கெஞ்சிய வயோதிபர்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர், தன்னையும் முதியோர் இல்லத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கைதடி முதியோர் இல்லத்தின் வெளிவாயிலில் நின்று வீறிட்டு அழுது குழறிய நெஞ்சைப் பிசையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அவரது துயரநிலையை கவனத்தில் கொண்ட இல்ல நிர்வாகம், உடனடியாக அவரை இல்லத்தில் சேர்த்துக் கொண்டது.
வட்டுக்கோட்டையை சேர்ந்த சபாபதிப்பிள்ளை இராஜகோபால் (85) என்பவரே இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதியவராவார்.
கடந்த ஏழு வருடமாக கொழும்பில் 
உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தேன் என்றும், தறபோது உறவினர்கள் யாருமின்றி வாழ்வதற்கு சிரமப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் என்றும் கைதடி முதியோர் இல்ல நிர்வாகம் 
தெரிவித்துள்ளது.
உடல்நலம் குன்றிய நிலையில், அடுத்து என்ன செய்வதென தெரியாத நிலையில், முதியோர் இல்லா வாயிலுக்கு வந்து தன்னை இணைத்துக்கொள்ளும்படி கோரியிருக்கிறார். முதியோர் இல்லத்தில் இணைப்பதற்கான நிர்வாக நடைமுறையை 
குறிப்பிட்டபோது, தனது உடல்நிலையை குறிப்பிட்டு வீறிட்டு அழுதுள்ளார். இதையடுத்து அவரை இல்லத்தில் இணைத்துக்கொள்ள நிர்வாகம் உடனடி நடவடிக்கையெடுத்தது.
அவர் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள வசதியாக அவரது உறவினர்கள் இல்லத்துடன் தொடர்புகொள்ளுமாறு இல்லத்தின் அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கைதடியில் முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு கெஞ்சிய வயோதிபர்

மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி நாவற்குழியில் கொள்ளை

நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் சங்கிலி , தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரின் வீட்டு கூரையை பிரித்து நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று மூதாட்டியை தாக்கி
 , அவரின் முகத்தை துணியால் கட்டி அவரை அங்கிருந்த கதிரை ஒன்றில் கட்டி வைத்து விட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி , தோடு என்பவற்றை அபகரித்ததுடன் , வீட்டினுள் தேடுதல் நடத்தில் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 3 கையடக்க தொலைபேசி  என்பவற்றையும் கொள்ளையிட்டு தப்பி சென்று உள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னர் மூதாட்டியின் அவல குரல் கேட்டு அயலவர்கள் சென்று மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சண்முகநாதன் நித்தியலட்சுமி (வயது 
70) என்பவரே காயமடைந்தார். அதேவேளை தனக்கு 17 வயதிருக்கும் போது தந்தை தோடுகளை வாங்கி தந்ததாகவும் , தாய் சங்கிலியை வாங்கி தந்ததாகவும் , அவற்றையே இதுவரை காலம் அணிந்து இருந்த போது அவற்றை கொள்ளையர்கள் அபகரித்து சென்று விட்டனர் என கண்ணீர் மல்க சாவகச்சேரி பொலிஸரிடம் முறையிட்டு உள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசரணைகளை 
முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி நாவற்குழியில் கொள்ளை

புகையிரதத்துடன் லான்ட்மாஸ்ரர் யாழில் விபத்து

புதன், 19 டிசம்பர், 2018

கொழும்பில் இருந்து காங்கேசன் துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத்துடன் யாழில் லான்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு 
அருகில் உள்ள புகையிரத கடவையை கடக்க
 முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது.அதன் போது லான்ட்மாஸ்ரர் சாரதி மயிரிழையில்
 உயிர் தப்பியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - புகையிரதத்துடன் லான்ட்மாஸ்ரர் யாழில் விபத்து

உடுவிலிலில் மூதாட்டி குருதி வெள்ளத்தில்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது.
இந்த நிலையில் . படுகாயமடைந்து குருதி வெள்ளத்திலிருந்த மூதாட்டியை  மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.
 இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் உடுவிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்யுலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.
 பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
வீட்டிலே  வளர்ப்பு நாய் நின்றுள்ளது. அது குரைத்த சத்தம் கேட்கவில்லை. இரண்டு கைகளும் கொடூரமாக அடித்து 
உடைக்கப்பட்டுள்ளன.
 தலைப்பகுதி,மற்றும் முகம் முழுவதும் அடிகாயங்கள் காணப்படுகின்றன. கொள்ளையிடும் நோக்கத்தோடு இச்சம்பவம் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளின் கணவர் ( தாதிய உத்தியோகத்தர் - தெல்லிப்பளை வைத்தியசாலை) 
தெரிவித்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - உடுவிலிலில் மூதாட்டி குருதி வெள்ளத்தில்

கொடிகாமத்தில் ரயிலுடன் மோதி நொருங்கிய வாகனம்

யாழில் சற்று முன் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட Mahendira ரக வாகனத்தை யாழ் தேவி புகையிரதம் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

Mahendira வாகனத்தின் பின்பகுதியில் மோதி அதனை வீதிக்கு வெளியே தள்ளியுள்ளது புகையிரதம். இதனால் மயிரிழையில் 
உயிர் தப்பியுள்ளார் சாரதி.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - கொடிகாமத்தில் ரயிலுடன் மோதி நொருங்கிய வாகனம்

எச்.ஐ.வி விழிப்புனர்வு யாழ் மாவட்டத்தில்

சனி, 1 டிசம்பர், 2018

சர்வதேச எச்.ஐ.வி தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் செயற்றிட்டம் ஒன்று யாழ் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ் சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த எச்.ஐ.வி விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம் யாழ் நகரை மையப்படுத்தி இடம்பெற்றது.
யாழ் கடற்கரை வீதியில் அமைந்துள்ள
 சிறைச்சாலை
 வளாகத்திலிருந்து ஆரம்பமான எச்.ஐ.வி விழிப்புனர்வு நடைபவனி பண்ணை வீதி, வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ் பிரதான தபால் அலுவலகத்தில் நிறைவடைந்து அங்கு விழிப்புனர்வு செயற்பாடுகள் 
இடம்பெற்றன.
எச்.ஐ.வி குறித்து பொது மக்களை அறிவுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு யாழ் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் தலைமையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் என பலர் இதில் 
கலந்துகொண்டனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - எச்.ஐ.வி விழிப்புனர்வு யாழ் மாவட்டத்தில்

நாட்டில் சா/ தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

எதிர்வரும் திங்கட்கிழமை(03) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை  எதிர்வரும் 12 ஆம் திகதி 
நிறைவடையவுள்ளது. 
இந் நிலையில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடவடிக்கைகளுக்காக 47 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 4,561 பரீட்சை நிலையங்களும், 541 பரீட்சை இணைப்பு நிலையங்களும் நாடு தழுவிய ரீதியில் 
அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இரத்மலானை விசேட தேவையுடையோர் வித்தியாலயம் மற்றும் தங்கல்ல மாத்தறை சிலாபம் கொழும்பு மகசீன் சிறைச்சாலை போன்றவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் 
அமைக்கப்பட்டுள்ளன. 
போராதனை போதனா வைத்திசாலை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றவற்றிலும் பரீட்சை நடைபெறவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>



READ MORE - நாட்டில் சா/ தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி