எதிர்வரும் 12ம் திகதி சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்

செவ்வாய், 21 நவம்பர், 2017

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில் 5,116 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் 
குறிப்பிடப்பட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - எதிர்வரும் 12ம் திகதி சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்

நாட்டில் தொலைபேசி பாவனையாளர்களின் கவனத்திற்கு!

வியாழன், 9 நவம்பர், 2017

அநாமதேய தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி மக்களை தொல்லைப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகுமென இலங்கை பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, இனிவரும் காலத்தில், இவ்வாறான செயற்பாடுகளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, ஒழுக்கற்றமற்ற மற்றும் அநாகரிகமான முறையில் குறுந்தகவல்களை அனுப்புவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் பல்வேறு முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு
 விடுக்கப்பட்டுள்ளது
ங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் தொலைபேசி பாவனையாளர்களின் கவனத்திற்கு!

யாழ் மானிப்பாயில் கேணிக்குள் விழுந்து மாணவன் பலி

புதன், 8 நவம்பர், 2017

யாழ் மானிப்பாயில் உள்ள ஆலயம் ஒன்றின் கேணிக்குள் விழுந்து மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவமானது 07.11.2017. செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவனது அடையாள அட்டை ஆலய கேணிக்குள் விழுந்துள்ளது, அதனை எடுக்க முயன்றபோது மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும், இதில் உயிரிழந்த மாணவன் 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் மானிப்பாயில் கேணிக்குள் விழுந்து மாணவன் பலி

அவசர அறிவித்தல்;சாரதிகளுக்கும் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில்!

திங்கள், 6 நவம்பர், 2017

நாட்டில் மூன்று நாட்களுக்கு போதுமான பெற்றோலே கையிருப்பில் உள்ளது என பெற்றோலிய வளக் கூட்டுத்தாபன உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பெற்றோலிய வள திணைக்களத்தின் பெற்றோல் கையிருப்பு குறைந்து கொண்டு செல்வதாகத்
 தெரிவிக்கப்படுகிறது.
முத்துராஜவல களஞ்சியத்தில் காணப்படும் பெற்றோல் தொகை கையிருப்பு அனைத்து தீர்ந்து விட்டதாகவும், கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையில் வரையறுக்கப்பட்ட அளவே பெற்றோல் காணப்படுகின்றது.
அத்தியாவசிய தேவைகளுக்காக பெற்றோல் விநியோகம் செய்யப்பட வேண்டியுள்ளது.எதிர்வரும் 9ம் திகதி எரிபொருள் கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளது. கப்பலில் கொண்டு வரப்படும் எரிபொருளை எதிர்வரும் 10ம் திகதியே விநியோகம் செய்ய முடியும் என்பது
 குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெற்றோலை சிக்கனமாக பயன்படுத்துமாறு பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் மக்களிடம் கோரியுள்ளார்.
இந்தியன் ஒயில் நிறுவனத்தினால் தருவிக்கப்பட்ட எரிபொருள் கப்பலில் காணப்படும் எரிபொருள் தரம் குறைந்தது என்ற காரணத்தினால், அதனை விநியோகம் செய்ய அனுமதிக்கவில்லை என அமைச்சர் 
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் விமர்சனம் செய்யாது பெற்றோலிய வள அமைச்சு தொடர்பில் அர்ஜூன ரணதுங்க கவனம் செலுத்த வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - அவசர அறிவித்தல்;சாரதிகளுக்கும் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில்!

நாட்டில் சந்தையிலுள்ள இறைச்சி வகையின் பயன்பாடு குறித்து அவதானம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
அரச மிருக வைத்தியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக அறுப்பதற்காக கொண்டு செல்லப்படும் மாடு, ஆடு, பன்றி போன்றவற்றுக்கு கடந்த பல வாரங்களாக சுகாதார சான்றிதழ் விநியோகிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகவும் 
கூறப்படுகின்றது.
இதனால், உணவுக்காக சந்தையில் வைக்கப்பட்டுள்ள கால்நடை இறைச்சி வகைகளின் சுகாதாரத் தன்மை சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளதாகவும் அரச மிருக வைத்தியர் சங்கத்தின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
READ MORE - நாட்டில் சந்தையிலுள்ள இறைச்சி வகையின் பயன்பாடு குறித்து அவதானம்

நாட்டில் அரிசி மற்றும் பருப்பு விலை குறைப்பு

வியாழன், 2 நவம்பர், 2017

 சதொச வர்த்தக நிலையங்களில் இன்று தொடக்கம் அரிசி மற்றும் பருப்பை குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியும்என கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் 
தெரிவித்தார். 
தற்போது ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை
 மேற்கொள்ளப் பட்டுள்ளது.
சம்பா அரிசி ஒரு கிலோவை 78 ரூபாயுக் கும், நாட்டரிசி ஒரு கிலோவை 73 ரூபாயுக் கும் பெற்றுக் கொள்ள முடிவதோடு, ஒரு கிலோ பருப்பை 148 ரூபாயுக்கு நாடு முழுவ தும் உள்ள எந்தவொரு
 சதொச நிலையத்தி லும் பெற்றுக் கொள்ளலாம் என்று கொழு ம்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ரிஷாட் பதியூதின் 
தெரி வித்தார். 
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>



READ MORE - நாட்டில் அரிசி மற்றும் பருப்பு விலை குறைப்பு