நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு

செவ்வாய், 17 அக்டோபர், 2017

மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25000 ரூபா அபராதம் விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதத்தில் வெளியிடப்பட உள்ளதுமோட்டார் போக்குவரத்து கட்டளைச் சட்டத் திருத்தங்கள் மற்றும் அபராதத் தொகை தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட உள்ளன.
 சுமார் மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான உத்தேச வரைவுத் திட்டங்கள் ஏற்கனவே திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
ஐந்து மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25000 ரூபா அபராதம் விதித்தல், மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ் தர நிர்ணயம் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உச்சபட்ச வேகத்தை மணிக்கு 40 கிலோமீற்றர் என வரையறுத்தல் ஆகியன தொடர்பிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட உள்ளன
முச்சக்கர வண்டியில் பயணம் செய்யக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை வரையறை குறித்தும் இந்த வர்த்மானி அறிவித்தலில் 
குறிப்பிடப்பட உள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக