நாட்டில் சாய்ந்தமருதில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுப்பிடிப்பு

புதன், 17 ஏப்ரல், 2024

நாட்டில் கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் முன்னெடுத்து 
வருகின்றனர்.  
சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து
 உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை
 பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் 
வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்
 சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  
கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய
 சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை 
பார்வையிட்ட அவர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில்
 முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி 
பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்ததுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.  
அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட காரியாலய
 உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் முன்னெடுத்திருந்தனர். 
இதன்போது  மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.  
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டது. 
அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சாய்ந்தமருதில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுப்பிடிப்பு

நாட்டில் மரக்கறிகளின் விலைகள் வழமைக்கு மாறான குறைவடைந்துள்ளன

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

நாட்டில் பண்டிகைக் காலம் முடிவடையும் போது மரக்கறிகளின் விலைகளும் குறைவடைந்துள்ளன. பண்டிகைக் காலம் முடிவடையும் போது மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பது வழக்கம். 
ஆனால் இந்த வருடத்தில் பண்டிகை காலம் முடிவடையும் போது மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 இதன்படி, கொழும்பு புறக்கோட்டையில்.16-04-2024. இன்று  250 கிராம் தக்காளி 40 ரூபாவாகவும், 250 கிராம் பீன்ஸ் 50 ரூபாவாகவும், 250 கிராம்
 வெண்டிக்காய் 50 ரூபாவாகவும், 250 கிராம் கரட் 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மரக்கறிகளின் விலைகள் வழமைக்கு மாறான குறைவடைந்துள்ளன

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் டொலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திங்கள், 15 ஏப்ரல், 2024

நாட்டுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி 
தெரிவித்துள்ளது.
 அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1,536.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 1,432.2 மில்லியன் டொலர்களாகும்.
 இதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 89.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.
 இதற்கமைய சுற்றுலா வருகையின் மூலம் கிடைத்த 
வருவாய் 1,025.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் டொலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிமாகாணங்களுக்கு புத்புத்தாண்டை முன்னிட்டு சென்றவர்கள் கொழும்பு வர விசேட ரயில்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நாட்டில்  புத்புத்தாண்டை முன்னிட்டு வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக.14-04.2024. இன்று பிற்பகல் முதல் மேலதிக
 புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 
ரயில்வே பிரதி பொது முகாமையாளர் திரு.நந்தன இண்டிபோலகே தெரிவித்தார்.
அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்த புகையிரத நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் பயணங்கள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வெளிமாகாணங்களுக்கு புத்புத்தாண்டை முன்னிட்டு சென்றவர்கள் கொழும்பு வர விசேட ரயில்

நாட்டின் ரூபா தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

சனி, 13 ஏப்ரல், 2024

நாட்டில் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.
 இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.
 ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டின் ரூபா தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

நாட்டில் இலங்கை மத்திய வங்கி அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மார்ச் 2024 இல் 715 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், பெப்ரவரி மாதத்தில் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 239.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு
 செய்துள்ளது.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த வருடத்தில் இதுவரை சந்தையிலிருந்து மத்திய வங்கி கொள்வனவு செய்த மொத்தத் தொகை 1,199 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் பதின் மூன்று மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

வியாழன், 11 ஏப்ரல், 2024

நாட்டில் பதின் மூன்று மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  
அறிவிப்பின்படி,.11-04-2024. இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அமுலாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
 குறித்த பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான 
அதிக சாத்தியம் 
காணப்படுவதால், மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு 
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காலநிலை அதிகாரிகள் மக்களை கோருகின்றனர். 
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என சுட்டிக்காட்டப்படுகிறது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பதின் மூன்று மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை