வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் டொலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திங்கள், 15 ஏப்ரல், 2024

நாட்டுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி 
தெரிவித்துள்ளது.
 அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1,536.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 1,432.2 மில்லியன் டொலர்களாகும்.
 இதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 89.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.
 இதற்கமைய சுற்றுலா வருகையின் மூலம் கிடைத்த 
வருவாய் 1,025.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் டொலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிமாகாணங்களுக்கு புத்புத்தாண்டை முன்னிட்டு சென்றவர்கள் கொழும்பு வர விசேட ரயில்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நாட்டில்  புத்புத்தாண்டை முன்னிட்டு வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக.14-04.2024. இன்று பிற்பகல் முதல் மேலதிக
 புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 
ரயில்வே பிரதி பொது முகாமையாளர் திரு.நந்தன இண்டிபோலகே தெரிவித்தார்.
அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்த புகையிரத நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் பயணங்கள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வெளிமாகாணங்களுக்கு புத்புத்தாண்டை முன்னிட்டு சென்றவர்கள் கொழும்பு வர விசேட ரயில்

நாட்டின் ரூபா தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

சனி, 13 ஏப்ரல், 2024

நாட்டில் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.
 இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.
 ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டின் ரூபா தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

நாட்டில் இலங்கை மத்திய வங்கி அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மார்ச் 2024 இல் 715 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், பெப்ரவரி மாதத்தில் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 239.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு
 செய்துள்ளது.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த வருடத்தில் இதுவரை சந்தையிலிருந்து மத்திய வங்கி கொள்வனவு செய்த மொத்தத் தொகை 1,199 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் பதின் மூன்று மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

வியாழன், 11 ஏப்ரல், 2024

நாட்டில் பதின் மூன்று மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  
அறிவிப்பின்படி,.11-04-2024. இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அமுலாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
 குறித்த பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான 
அதிக சாத்தியம் 
காணப்படுவதால், மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு 
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காலநிலை அதிகாரிகள் மக்களை கோருகின்றனர். 
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என சுட்டிக்காட்டப்படுகிறது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பதின் மூன்று மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

நாட்டில் முட்டை மற்றும் மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

புதன், 10 ஏப்ரல், 2024

நாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, 
கோழி, இறைச்சி மற்றும் பழங்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 அத்தோடு, கடந்த மாதங்களில் வேகமாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலையும், தட்டுப்பாடும் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 புத்தாண்டுக்கு முன்னர் ஒரு கிலோ கரட்டின் விலை 5,000 ரூபாவாக அதிகரிக்கும் என பலர் கூறிய போதிலும் தற்போது கரட் மட்டுமன்றி அனைத்துப் பொருட்களினதும் விலை குறைவடைந்துள்ளதாகவும்
 வலியுறுத்தியுள்ளார்.
 அதுமட்டுமன்றி மே மாதத்திற்கு முன்னர் முட்டையினது விலை 30 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் முட்டை மற்றும் மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கு நாளையுடன் விடுமுறை

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

இலங்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணையின் முதற்கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக கல்வி 
அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாத இணையம்.>>>



READ MORE - இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கு நாளையுடன் விடுமுறை